ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்வு

வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முன்னணி கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட எம்எல்ஏக்களால் பாஜக சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமில் ஆட்சிக்குவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாம் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 52 வயதான ஹிமந்தா பிஸ்வாசர்மா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறும் சர்பானந்த் சோனோவால் மற்றும் கட்சியின் நான்குமத்திய பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்மாவின்பெயரை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அறிவித்த நிலையில், சர்பானந்த் சோனோவால், பாஜகவின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சர்மாவின் பெயரை முன்மொழிந்தார். மற்றவர்கள் அதைஆதரித்தனர்.

நரேந்திர சிங் தோமரைத் தவிர, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் மற்றும் கட்சியின் தேசியதுணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா ஆகியோரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மத்திய பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

2001 முதல் ஐந்தாவது முறையாக ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மா, சோனோவால் அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சராக இருந்தார். டெல்லியில் உள்ள பாஜகதலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நீற்று நடந்த மூன்று சுற்று கூட்டங்களுக்குப் பிறகு இன்று குவஹாத்தியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சர்பானந்த் சோனோவால், சர்மா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் உடனிருந்தனர்.

அசாமின் பூர்வீக சோனோவால்-கச்சாரி பழங்குடியினரைச் சேர்ந்த சோனோவால் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு வடகிழக்குஜனநாயகக் கூட்டணியின் அழைப்பாளராக இருக்கும் சர்மா ஆகியோர் சமீபத்தில் நடந்த மூன்றுகட்ட மார்ச்-ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வழிநடத்தினர்.

126 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில், பாஜக 60 இடங்களையும், அதன்கூட்டணி கட்சிகளான அசோம் கணபரிஷத் (ஏஜிபி) ஒன்பது இடங்களையும், யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்) ஆறுஇடங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...