ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்வு

வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முன்னணி கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட எம்எல்ஏக்களால் பாஜக சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமில் ஆட்சிக்குவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாம் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 52 வயதான ஹிமந்தா பிஸ்வாசர்மா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறும் சர்பானந்த் சோனோவால் மற்றும் கட்சியின் நான்குமத்திய பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்மாவின்பெயரை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அறிவித்த நிலையில், சர்பானந்த் சோனோவால், பாஜகவின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சர்மாவின் பெயரை முன்மொழிந்தார். மற்றவர்கள் அதைஆதரித்தனர்.

நரேந்திர சிங் தோமரைத் தவிர, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் மற்றும் கட்சியின் தேசியதுணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா ஆகியோரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மத்திய பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

2001 முதல் ஐந்தாவது முறையாக ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மா, சோனோவால் அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சராக இருந்தார். டெல்லியில் உள்ள பாஜகதலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நீற்று நடந்த மூன்று சுற்று கூட்டங்களுக்குப் பிறகு இன்று குவஹாத்தியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சர்பானந்த் சோனோவால், சர்மா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் உடனிருந்தனர்.

அசாமின் பூர்வீக சோனோவால்-கச்சாரி பழங்குடியினரைச் சேர்ந்த சோனோவால் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு வடகிழக்குஜனநாயகக் கூட்டணியின் அழைப்பாளராக இருக்கும் சர்மா ஆகியோர் சமீபத்தில் நடந்த மூன்றுகட்ட மார்ச்-ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வழிநடத்தினர்.

126 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில், பாஜக 60 இடங்களையும், அதன்கூட்டணி கட்சிகளான அசோம் கணபரிஷத் (ஏஜிபி) ஒன்பது இடங்களையும், யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்) ஆறுஇடங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...