இந்து முன்னணி செயலாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

 திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர், அம்பத்தூர் தொழிற் பேட்டையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கோவை அருகே வியாழக் கிழமை பிடிபட்டார்.

இது குறித்து, போலீஸார் கூறியது: திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணிச் செயலாளர் சுரேஷ் குமார், கடந்த இரு மாதங்களுக்கு முன், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்பட 10க்கும் மேற்பட்டோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையில் இந்துமக்கள் கட்சியின் தமிழகத் தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக, கோவையில் என்.எச். சாலை பகுதியில் மானியத் தோட்டத்தை சேர்ந்த என்.சதாம் உசேன் உள்பட 6 பேரை செல்வபுரம் போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த இரு வழக்குகளிலும் தொடர்புடைய மேலும் சிலரை அம்பத்தூர், செல்வபுரம் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம், கூடன் குளத்தைச் சேர்ந்த குட்டி குலான் (எ) சாகுல் (25) என்பவரை அம்பத்தூர் தனிப்படை போலீஸார், கோவை போலீஸார் உதவியுடன் வியாழக்கிழமை மாலை கோவை, பெரியநாயக்கன்பாளையம் என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே வைத்துப் பிடித்து, சென்னை கொண்டு சென்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...