ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது.
இதனிடையே, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "வால் ஸ்ட்ரீட்' பத்திரிகையில் மோடி எழுதியுள்ள கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் செழிப்பாகவாழும் அமெரிக்கவாழ் இந்திய சமூகம், இந்திய-அமெரிக்க கூட்டு பங்களிப்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவர்நலனில் ஒருவர் அக்கறை கொண்டதன் மூலமாக, இருநாடுகளும் பல வெற்றிகளை கண்டுள்ளோம்.
ஆசிய, பசிபிக் பகுதிகளில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, தீவிரவாதத்தை ஒழித்தல், கடல்பகுதிகளை பாதுகாத்தல், இணையதள குற்றத்தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல்வேறு அம்சங்களில் இருநாடுகளும் வலிமை பெற்றுள்ளன.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் வலிமையை பயன் படுத்தி உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். உலகளாவிய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு சர்வதேச அளவில் மேலும் பல முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபடமுடியும்.
இன்றைய மின்னணு யுகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருநாடுகளும் கொண்டுள்ள வலிமை, மக்களை வழிநடத்துவதற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.
கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா உந்துசக்தியாக விளங்குகிறது என்று அந்த கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.