”ஜெ” வழக்கும்–தண்டனையும்–நீதிபதியும்

 அப்பாடா–கடைசியாக "ஜெ" வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது..18 ஆண்டுகாலங்கள் நடந்த வழக்கு..12 ஆண்டு காலத்தை " ஒரு மாமாங்கம்" என்பார்கள்..அப்படியானால், ஒண்ணரை மாமாங்கம் நடந்த வழக்கு..இதை எதற்கு சொல்கிறீர்கள் என்கிரீர்களா?

லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சௌவுதாலா, செல்வகணபதி இவர்களெல்லாம் "உள்ளே" போகவில்லையா?–"ஜெ" உள்ளே போனதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா?

பல புதுமைகளின் புகலிடம் இந்த வழக்கு..பல தீர்ப்புகளின் "தெளிரல்" இந்த வழக்கு.

1996 இல் தொடங்கிய வழக்கு…நூற்றுக்கணக்கான "வாய்தாக்கள்"—அதே அளவு அப்பீல்கள்—உயர்நீதி மன்றம் உச்சம்—உச்சநீதி மன்றம் மிச்சம்—என் அப்பீல்கள அளவு கடந்தன..

குற்றப்பத்திரிக்கை பல ஆயிரம் பக்கங்கள்..ஆங்கிலத்தில்…மொழி தெரியாது என தமிழில் மாற்றச்சொல்லி பலகாலம் இழுத்தடிப்பு…செய்த மொழிமாற்ரம் தவறு என இன்னும் கொஞ்சம் காலம் மேலும் இழுத்தடிப்பு..

நேரடி "ஆஜருக்கு" வரமுடியாது– என பல ஆயிரம் பெட்டிஷன்கள்..செப்டம்பர் 20ந்தேதி தீர்ப்பை தள்ளிவையுங்கள் என "கடைசி " வாய்தா…தீர்ப்புதேதியை 27 க்கு மாற்றிய பிறகும் உச்சநீதி மன்றத்தில் 27 ந்தேதி தீர்ப்பை நிறுத்தி வைக்க பெட்டிஷன்..

"ஜெ" மந்திரிகளை நம்புவதில்லை –"ம்ந்திரங்களை " நம்புவார்..கோர்ட்டின் மீது இருந்த அவநம்பிக்கையால், 250 மாந்திரீகர்ளுடன் நள்ளிரவு யாகம்…,வீடிந்ததும் பெங்களூர் புறப்பட்டார்.என செய்திகள்..

இதற்கிடையே வக்கீல்கள் மாற்றம்.–.நீதிபதிகள் தூக்கியடிப்பு,– என்ற நாடகங்கள்..தற்போதைய நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவும் இந்த அழுத்தங்களுக்கு தப்பவில்லை.".27 ந்தேதியை நான் மாற்ற மாட்டேன்..வேண்டுமென்றல் நீங்கள் என்னை மாற்றிக்கொள்ளுங்கள்."–.என்றார், குன்ஹா.

தீர்ப்பு விவரங்கள் "கசிந்து விடக்கூடாது" என்பதால், தானே கைப்பட எழுதினார்..தானே தட்டச்சு செய்தார்..காலை 8 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 6 மணிக்கே வீடு திரும்புவார்..

தீர்ப்பு நாளில் கூட பல "சஸ்பென்ஸ்" 11 மணிக்கு தீர்ப்பு–அது 1.00 மணியானது..பிறகு 3. மணியானது..ஆனாலும், நமக்கு தெரிய 5.00 மணியானது..

யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு..சாதா–ரணமாக–த்தான் இருக்கும் என "ஜெ" உட்பட அனைவரும் நினைத்த தீர்ப்பு.."ஜெ" யின் ஆஸ்தான தமிழக "நுண்ணரிவு" போலிஸ் –மோப்ப சக்தி இழந்த -துப்பறியும் நாயானது.–

பகல் ஒரு மணிக்கு "குற்றவாளி" என்ற தீர்ப்பு–மாலை 5.மணிக்கே 4 வருட சிறைத் தண்டனை–100 கோடி ரூபாய் அபராதம் என்கிற விஷயங்கள் வெளியிடப்பட்டன..6..மணிக்கே பக்கத்தில் இருந்த பரப்பனங்காடு அக்ரஹார சிறையில் "ஜெ" அண்ட் கோ–அடைக்கப்பட்டனர்…. ஜெ யின் மருத்துவ சிகிச்சை கோரிக்கைக்கு வெளி மருத்துவ மனைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு–என பலபுதுமைகள்..

66.6 கோடிரூபாய் ஊழலுக்கு இந்திய நீதிமன்றங்கள் கண்டிராத ரூ.100 கோடி அபராதம்..இதில் நீதிபதியின் கணக்கும் உள்ளது..66.6 கோடி ரூபாய்க்கு. 18 ஆண்டுகால "சாதா" வட்டி போட்டாலும், அது 350 கோடியை தாண்டுகிறது .. எனவே 100 கோடி 'நியாயப்படி" குறைவுதான்..இதிலும் கர்நாடக அரசுக்கு இந்த வழக்கினால் ரு. 5. கோடி செலவு ஏற்பட்டதால், அதை கர்னாடக அரசு எடுத்துக்கொள்ளவும் –என உத்தரவு வழங்கிய நிதிபதி.. புதுமை–புதுமை–புதுமையோ புதுமைகள் என பல புதுமைகளை அரங்கேற்றியுள்ளார்.

இந்திய நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு தெம்பு, தைரியம், ஒரு நீதிபதிக்கு எப்படி வந்தது?–நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவின் செயலுக்கு முக்கிய காரணம் "நீதியையும் நீதிமன்றங்களையும் விலைக்கு வாங்கமுடியாது" என்ற உறுதி கொண்ட மாமனிதர் மோடியின் அரசின் செயல்பாடுதான் காரணம்..

இதே மதிரி எத்தனையோ தீர்ப்புக்கள் கடந்த காலங்களில் எழுதப்பட்டிருக்கின்றன ..அவைகள் ஆட்சியாளர்களின் "நெருக்குதல்களால்" திருத்தப்பட்டிருக்கின்றன…..நீதித்துறையில் அரசியல் குருக்கீடுகள் இருக்காது என்கிற பாஜக அரசின் உறுதி மொழி காப்பற்றபட்டிருக்கிறது..அதன் விளைவே இத்தகைய தீர்ப்புக்கள்..

சட்டமந்திரி ரவிஷங்கர் பிரசாத் நேரில் வந்து பார்த்ததில் நம்பிக்கையுடன் இருந்த "ஜெ"–"மந்திரி வந்தாலும்–மந்திரம் செய்தாலும்"–நீதியின் ஆட்சியை" யாராலும் தடுக்க முடியாது என்ற பாஜக வின் நேர்மைக்கு இது ஒரு சாட்சி..

நீதியை நிலைநாட்டிய நீதிபதி டிகுன்ஹாவுக்கு மீண்டும் ஒரு சபாஷ்–நிதிமன்றங்களில் குறுக்கீடு செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தை தொடர்ந்து காப்பாற்றிவரும் மோடி அரசுக்கு ஒரு சபாஷ்..

இனி என் கவலையெல்லாம் அதிக நம்பிக்கையில் இருந்த ஆ.ராசா–கனிமொழி–தயாநிதி,கலநிதி மாறன்களின் நிலையை நினத்துத்துதான்..66.கோடிக்கே 4 வருஷம் என்றால், 176000 கோடிக்கு எத்தனை வருஷம்..சொன்னாலே தலை சுத்துதே….

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...