ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அமெரிக்கா ஆதரவு

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா – பிரதமர் நரேந்திரமோடி இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் ஒபாமாவும், நரேந்திர மோடியும் அதிகாரப் பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் 2 மணிநேரம் வரை நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம், விண்வெளி, பயங்கரவாதம், ஆப்கானிஸ்தான், எபோலா நோய் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இரு நாடுகளிடையேயான உறவை புதியகட்டத்துக்கு எடுத்துச் செல்வதென்று முடிவுசெய்தனர்.

அதைத்தொடர்ந்து, இந்தியா-அமெரிக்கா நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து செயல் படுவதென இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் புகலிடங்களை அழிக்க உறுதியான, கூட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன. இதில், அல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதக் குழுக்களுக்கும், தாவூத் இப்ராஹிம், ஹக்கானி குழுவினருக்கும் எவ்வித நிதியுதவியும் கிடைக்க விடாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதும் அடங்கும்.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இரு நாடுகளும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

உலக அளவில் ஆயுதப் பரவலை தடுப்பதிலும், ஆயுத ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழு (என்எஸ்ஜி), ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாடு அமைப்பு(எம்.டி.சி.ஆர்), தி வாஸ்ùஸனர் ஏற்பாடு, தி ஆஸ்திரேலியன் குழு ஆகியவற்றில் இந்தியா உறுப்பினராகச் சேர்வதற்கு 2 நாடுகளின் தலைவர்களும் தொடர்ந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளனர். இந்த 4 அமைப்புகளிலும் இந்தியா விரைவில் உறுப்பினராவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

கடல் பகுதியில் அனைத்து நாடுகளும் தங்களது கப்பல்களை சுதந்திரமாக இயக்குவது உறுதிசெய்யப்பட வேண்டும். குறிப்பாக, தென்சீனக் கடல் பகுதியில் இது உறுதிசெய்யப்பட வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது சுய லாபத்துக்காக பிற நாடுகளுக்கு மிரட்டல்கள் விடுப்பதையும், படைபலத்தைப் பயன் படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீரமைக்கப்படும்போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஏற்கெனவே நிலவும் ஒத்துழைப்புக்கு புத்துயிர் அளிக்கவும், இருநாடுகளும் இணைந்து செயல்பட புதிய துறைகளைக் கண்டறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம், 2001ஆம் ஆண்டிலிருந்து 5 மடங்கு அதிகரித்து, 10,000 கோடி டாலர்களாக (சுமார் ரூ.6 லட்சம் கோடி) உள்ளது. இதனை 50,000 கோடி டாலர்களாக (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அதிகரிக்க செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஒபாமாவும் உறுதிபூண்டுள்ளனர்.

அஜ்மீர், விசாகப்பட்டினம், அலகாபாத் ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக்கும் இந்தியாவின் நடவடிக்கையில் பங்கேற்குமாறு அமெரிக்கத் தொழில் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்து, ஒபாமாவுடன் இணைந்து பிரதமர் மோடி கூட்டாகப் பேட்டியளித்தார். அப்போது மோடி பேசுகையில், "இரு நாடுகளிடையே கையெழுத்தாகியுள்ள ஆக்கப் பூர்வ அணு சக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வதென்று முடிவுசெய்துள்ளோம். இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவு செய்வதற்கு, இது மிகவும் முக்கியமானதாகும்' என்றார்.

தனது அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, அந்நாட்டிலிருந்து புதன்கிழமை அவர் புறப்பட்டார். தில்லி வரும்வழியில் அவர், ஜெர்மனியின் ஃபிராங்கபர்ட் நகருக்குச்சென்றார்.

முன்னதாக, வாஷிங்டனில் தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக செவ்வாய்க் கிழமை இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சில் குழுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "அமெரிக்காவுக்கு, எனது நன்றி. எனது அமெரிக்கப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...