வலுவான பிரதமரின் தலைமையில் செயல்படும் அரசை நாட்டுக்கு பாஜக தந்துள்ளது

 காங்கிரஸை போன்று இல்லாமல் வலுவான பிரதமரின் தலைமையில் செயல்படும் அரசை நாட்டுக்கு பாஜக தந்துள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவில் நேற்று முன்தினம் தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "மக்களவைத் தேர்தலின்போது 100 நாட்களில் கருப்புபணத்தை மீட்போம் என்று பாஜக அளித்த வாக்குறுதி என்னவாயிற்று?" என கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியின் பணிகளை பாஜக அரசு தாங்கள் செய்தது போல் காட்டிக்கொள்ள முயல்கிறது" என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கூறும்போது, "ஆட்சியை இழந்தபிறகும் சோனியாவுக்கு உரை எழுதித்தருபவர்கள் உரிய முன்தாயரிப்பின்றி எழுதித்தருவது வருத்தமாக உள்ளது. இதனால் தான் அவர் இவ்வாறு பேசுகிறார். இதனை அவர் கண்ணாடி வழியாகபார்த்தால் தனது தவறுகளை உணர்வார்.

கருப்பு பணத்தை மீட்க உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளாக சிறப்புபுலனாய்வு குழு அமைக்கவில்லை. பாஜக அரசு முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுத்து குழுவை அமைத்தது. தற்போது கருப்புபணம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள சுவிட்சர்லாந்து உட்பட உலகின் அனைத்து நாடுகளும் முன்வந்துள்ளன.

முந்தையை காங்கிரஸ் அரசு பணியாற்றுவது போல் காட்டிக் கொண்டது. ஆனால் மோடியின் அரசு முடிவுகள் எடுத்து செயல் படுத்தும் அரசாக உள்ளது.

வலுவற்ற பிரதமரை சோனியா நாட்டுக்கு கொடுத்தார். அவர்கூறுவதை கட்சியோ, அமைச்சர்களோ காதுகொடுத்து கேட்டதில்லை. ஆனால் பாஜக வலுவான பிரதமரை நாட்டுக்கு கொடுத்துள்ளது.

அவரது ஆட்சித் திறன் காரணமாக அவரது கருத்துகளை நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளும் கூர்ந்து கவனிக்கின்றன.

ஏன் முடிவுகள் பிரதமர் இல்லத்தில் எடுக்கப் படுகின்றன? ஏன் தேசிய ஆலோசனை கவுன்சில் போன்று எதுவும் இல்லை? என்பது தான் சோனியா காந்தியின் இப்போதைய பிரச்சினை" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...