மராட்டியம், அரியானா மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது

 மராட்டியம், அரியானா மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இந்த 2 மாநிலங்களிலும் ஒரேகட்டமாக 15–ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு 15–ந் தேதி (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இதேபோல் அரியானா மாநிலத்தின் 90 சட்ட சபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மராட்டிய சட்டசபை தேர்தல்களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது.

சட்ட சபை தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 117 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி பிரிதிவிராஜ் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்–மந்திரி அஜித் பவார், பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வினோத் தாவ்டே, ஏக் நாத் கட்சே, மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

ஆனால் முதல்–அமைச்சர் பதவியை குறி வைத்து இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, மராட்டிய நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவில்லை.

கடந்த மாதம் 27ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து தேர்தல்பிரசார திருவிழா களைகட்ட தொடங்கியது.

பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். அன்றுமுதல் ஓரிரு நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் தீவிரபிரசாரம் செய்தார். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பொதுக் கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டினார்.

அரியானாவில் காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல்பிரசாரம் மேற்கொண்டன. இங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு இந்த 3 கட்சிகள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்கிறது.

இதனால் இன்று தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது கடைசிக்கட்ட பிரசாரத்தை செய்ய உள்ளனர். இதனைதொடர்ந்து தலைவர்கள், வேட்பாளர்கள் பொதுக் கூட்டங்களில் பேசவோ, ஊர்வலங்களாக செல்லவோ தேர்தல்கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனால் வீடுவீடாக சென்று வாக்குசேகரிக்கலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...