வதேரா நிலபேர ஊழல் புதிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதேரா நிலபேர ஊழலில் பலகோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தொடர்பாக அரியானாவில் புதிதாக பதவியேற்க உள்ள பிஜேபி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக அரியானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடத்திவந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதேராவுக்கு நில பேர ஊழலில் மாநில அரசு சட்டவிரோத சலுகைகள் காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அரசு ஒதுக்கிய நிலத்தை வங்கியில் பணம் இல்லாமலேயே வதேரா பெற்றார். பிரபலகட்டுமான நிறுவனம் அந்த நிலத்தை வாங்கியதில் பலகோடி ரூபாய் கைமாறியது. இதில் வதேரா பலநூறு கோடி ரூபாய் லாபம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி தேர்தலில் தூக்கி எறியப் பட்டது. பிஜேபி அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து மனோகர்லால் கட்டார் தலைமையில் புதிய பிஜேபி அரசு பதவியேற்க இருக்கிறது. இந்த அரசு பதவியேற்றதும் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான வதேரா நிலபேர ஊழல் குறித்து விசாரணை நடத்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

வதேரா ஊழலுக்கு போதிய ஆதாரம் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். சோனியா காந்தியின் குடும்பத்திற்கு பரிசாக முந்தைய காங்கிரஸ் அரசு சட்டவிரோத சலுகைகளை காட்டியதன் மூலம் பல நூறுகோடி ரூபாய் வதேரா ஈட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும் இந்த ஊழல் குறித்து குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் வதேராவின் நிலபேரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...