வதேரா நிலபேர ஊழல் புதிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதேரா நிலபேர ஊழலில் பலகோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தொடர்பாக அரியானாவில் புதிதாக பதவியேற்க உள்ள பிஜேபி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக அரியானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடத்திவந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதேராவுக்கு நில பேர ஊழலில் மாநில அரசு சட்டவிரோத சலுகைகள் காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அரசு ஒதுக்கிய நிலத்தை வங்கியில் பணம் இல்லாமலேயே வதேரா பெற்றார். பிரபலகட்டுமான நிறுவனம் அந்த நிலத்தை வாங்கியதில் பலகோடி ரூபாய் கைமாறியது. இதில் வதேரா பலநூறு கோடி ரூபாய் லாபம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி தேர்தலில் தூக்கி எறியப் பட்டது. பிஜேபி அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து மனோகர்லால் கட்டார் தலைமையில் புதிய பிஜேபி அரசு பதவியேற்க இருக்கிறது. இந்த அரசு பதவியேற்றதும் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான வதேரா நிலபேர ஊழல் குறித்து விசாரணை நடத்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

வதேரா ஊழலுக்கு போதிய ஆதாரம் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். சோனியா காந்தியின் குடும்பத்திற்கு பரிசாக முந்தைய காங்கிரஸ் அரசு சட்டவிரோத சலுகைகளை காட்டியதன் மூலம் பல நூறுகோடி ரூபாய் வதேரா ஈட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும் இந்த ஊழல் குறித்து குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் வதேராவின் நிலபேரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...