உரிய அனுமதியின்றி மேடையில் பிரதமர் அருகே அமர்ந்திருந்தவர் கைது

 முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவின் போது உரிய அனுமதியின்றி மேடையில் பிரதமர் அருகே அமர்ந்திருந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மும்பையில் கடந்தமாதம் 31-ந் தேதி முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பிரதமர் அருகே மேடையில் சந்தேகத்துக்கு இடமாக ஒருநபர் உரிய அனுமதியின்றி அமர்ந்திருந்தார்.

விழா நிறைவில் அவர் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் புகைப் படம் எடுத்துக் கொண்டார்.

பிரதமரின் அருகே அனுமதி யின்றி நபர் ஒருவர் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது. தற்போது அவரை போலீசார் கைதுசெய்து உள்ளனர். விசாரணையில், அவரதுபெயர் மிஸ்ரா என்று தெரியவந்தது. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 11-ந்தேதி வரை காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே நிருபர்களிடம் கூறுகையில், ''பிரதமர் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் உட்காருவது நல்லதல்ல. இது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...