ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி

 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவையொட்டி, மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த எஸ்.டி.சந்தோஷம், தென்காசியைச் சேர்ந்த டி.கணேசன், கரூரைச் சேர்ந்த ராஜ கோபாலன், கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன், கன்னியா குமரியைச் சேர்ந்த எஸ்.ஜோதின்தரன், சென்னையைச் சேர்ந்த துரைசங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

அந்தமனுக்களில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டுவிழா வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவையொட்டி, எங்களது மாவட்டத்தில் பேரணிநடத்த உள்ளூர் போலீஸாரிடம் அனுமதி கோரி மனு அளித்தோம். ஆனால், போலீஸார் அனுமதிவழங்க மறுத்துவிட்டனர். உள்ளூர் போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்க உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்தமனுக்கள் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி தாக்கல் செய்த பதில் மனுவில், "இது போன்ற பேரணிகளுக்குத் தடைவிதிக்க சென்னை மாநகர காவல்சட்டம், தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தின் கீழ், மாநகர காவல் ஆணையர், எஸ்.பி. ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய மாநில புலானய்வு துறை யிலிருந்து தகவல்கள் வந்துள்ளன. மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சீருடை அணிந்து, கையில் கம்பு ஏந்தி செல்வார்கள் என்பதால், பேரணிக்கு அனுமதி வழங்கப் படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், பேரணியின்போது அது போன்று கம்புகள் ஏந்த மாட்டோம். வன்முறையை தூண்டும்வகையிலோ அல்லது யாரையும் காயப்படுத்தும் வகையிலோ கோஷம் எழுப்பமாட்டோம். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசுதரப்பு கருத்துக்களை நிராகரித்த நீதிபதி, மனுதாரர்கள் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கவும், பேரணி-பொதுக் கூட்டம் நடத்த இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...