யோகாவை ஒரு பாடமாகசேர்க்க, மத்திய அரசு திட்டம்

 அடுத்த கல்வியாண்டு முதல், நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாகசேர்க்க, மத்திய அரசு திட்டம்மிட்டுள்ளது.

மத்திய யோகா மற்றும் ஆயுர் வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது:

யோகா கலையை கற்பதன்மூலம் இளம் தலை முறையினர், எதிர் காலத்தில் நல்லபண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் யோகாவை ஒருபாடமாக சேர்க்கும் படி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு, சாதகமான பதில் கிடைத்தால், வரும் ஜூன் மாதத்திற்குள், இந்ததிட்டத்தை அமல் படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியும், இந்த திட்டத்துக்கு அனுமதி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடம் ஆலோசனைகள் கேட்கப்படும். நம்முடைய பாரம் பரிய கலைகளையும், மருத்துவ முறைகளையும் மறந்துவிட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் நம்முடைய கலைகளையும், மருத்துவ முறை களையும் பின்பற்றி, வளர்ச்சி அடைந்துவிட்டன. அடுத்த கட்டமாக, அனைத்து கிராமங்களிலும் ஆயுர் வேத மையங்களையும் துவக்க திட்டமிட்டுள்ளோம். என்று அவர் கூறினார்.

மத்திய பிரதேச மாநில பாஜக., அரசு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை, அனைத்து பள்ளிகளிலும் யோகாவை ஒருபாடமாக சேர்த்து, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...