இடம் பெயர்ந்த பண்டிட் சமூகத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

 ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவை தொகுதிகளில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்கு 3 இடங்களை ஒதுக்குவதாக பா.ஜ.க உறுதியளித்துள்ளது. ஜம்முகாஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி, பாஜகவின் தொலைநோக்கு திட்ட அறிக்கை வெளியீட்டுவிழா ஜம்முவில் வியாழக் கிழமை நடைபெற்றது. அறிக்கையை வெளியிட்ட பாஜக எம்.பி அவினாஷ் ராய்கன்னா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 46 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதே போல ஜம்முவில் 37 தொகுதிகளும், லடாக்பகுதியில் 4 தொகுதிகளும் உள்ளன. இதில் காஷ்மீரில் உள்ள 46 இடங்களில், இடம் பெயர்ந்த பண்டிட் சமூகத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் படும்.

ஜம்மு, காஷ்மீரில் அமைதி நிலவச் செய்து, அந்த இடங்களில் உள்கட்டமைப்பு, சுற்றுலா துறைகளை முழுமையாக மேம்படுத்துவதே எங்கள்நோக்கம். நவீன மயமாக்கல், மக்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல்கவனம் செலுத்தப்படும். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இடம் பெயர்ந்த பண்டிட்களை மீள்குடியேற்றம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சட்டப் பேரவை, சட்ட மேலவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வகைசெய்யப்படும். ஜம்மு – காஷ்மீரில் பாஜக ஆட்சிக்குவந்தால், முதல் பணியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியநிவாரணம், அவர்களது வாழ்வாதாரத்திற்கான மறு சீரமைப்புகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் கணக்கில் நேரடியாக நிவாரணத்தொகை செலுத்தப்படும்.

ஊழல், அரசியல் தலையீடுகள் இல்லாத நிர்வாகத்துடன் பொது மக்களின் நண்பனாக பாஜக அரசு செயல்படும் என்று அவினாஷ் ராய்கன்னா தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...