அடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற்றம்

 அடிப்பது குற்றம் இல்லை–அழுவதுதான் குற்றம் என்றால் –ராஜா பேசியது தவறுதான்.. கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்– ராஜா பேசியது தவறுதான்..

ஒரு கட்சியின் தலைவரும்… நீண்ட அரசியல் அனுபவமுள்ள "வைகோ"— தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கி வந்து பேசியது சரி என்றால்– ராஜா பேசியது தவறுதான்..

பேச்சில் எது சரி?–எது தவறூ ? என்று யார் தீர்மானிப்பது?தமிழருவி மணியனா?–ஜி.ராமகிருஷ்ணனா?

அரசியல் நாகரீகம் என்பது என்ன?–அதையும் யார் நிர்ணயிப்பது?–ஈ.வி.கே.எஸ். இளங்கோவ்னா?

போதை மருந்து கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட 8 மீனவர்களில், ஐவர் இந்தியர்–மூவர் இலங்கையை சேர்ந்தவர்கள்..தண்டனை அறிவிக்கப்பட்ட 18 ஆம் நாள் அவர்கள் ( 5வர்) பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இந்திய மண்ணில் "சுதந்திரமாக" இறங்கினர்..

இது எப்படி சாத்தியமாயிற்று?–யாரால் விடுதலை கிடைத்தது?–காத்மாண்டு நகரில், "சார்க்க்" மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே –மோடி அவர்களின் வேண்டுகோலினால்தான் விடுதலை செய்தேன்..என்று சொல்லியுள்ளார்..

இதற்கு கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் மோடிக்கு நன்றி சொல்லும் போது கூட்டணியில் உள்ள "வைகோ" மட்டும் விடுதலையை" நாடகம்"– என்று சொல்லுவது எந்த "அரசியல்"–"கூட்டணி"–"நியாயம்"-"-தர்மம்"– என்று அவர்கள் கட்சிக்காரர்களே சொல்லட்டும்..

 
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்…"இலங்கை தமிழர் விஷயத்தில் இந்திய கட்சிகள், தயவு செய்து வாயை மூடிக்கொள்ளுங்கள்–உதவியும் வேண்டாம்–உபத்திரமும் வேண்டாம்"–நாங்கள் இலங்கை அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தீர்வை செய்து கொள்கிறோம்.." என்ற பிறகும்– வைகோ–"வாக்கெடுப்பு நடத்த கோருவதும்"–அதற்காக "காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா தயங்குவதால்தான்..இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை" என தேசதுரோக பேச்சை பேசுவதும்- நமக்கு ஆச்சரியமான விஷயமில்லை..

காரணம்…இவரும் இவரது மாஜி தலைவர் கலைஞரும், அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில் தண்டனைக்கு பயந்து கோர்ட்டில் " அரசியல் சட்டம் என எழுதி–வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்" என்று ஜகா வாங்கி விடுதலை பெற்றார்கள்..

"அடைந்தால் திராவிட நாடு–இல்லையேல் சுடுகாடு" என்ற கோஷத்தையும் தீயிட்டு எரித்த நிகழ்வுகள் நமக்கு இன்னும் அடக்கமுடியா சிரிப்பை வரவழைத்து கொண்டுதான் இருக்கிறது.

எனவே இவை திராவிட கட்சிகளின் "ஸ்டைலான" "போர் முழக்கம்"–

இது வடிவேலுவின் மிரட்டல் காமெடி..ஆனால் வடிவேலு மத்திய உள்துறை அமைச்சரையும், நாட்டின் பிரதமரையும் ஒருமையில் அழைத்தால், "வா–போ—வாடா–போடா"–என கைத்தட்டலுக்காக பேசினாலும், சட்டங்களும் போலிசும் ந்டவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அது நம் கவலை இல்லை….,

ஆனால், ஒரு கட்சியின் தலைவனையும் , உலகநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடி அவர்களையும், இழித்து..பழித்து பேசுவதை யார் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள்?

அப்படிப்பட்ட "ஜடமாக" பாஜகவினர் வளர்க்கப்பட வில்லை..

சகதி எடுத்து வீசி–துர்நாற்றநீரை உமிழ்ந்தவர் வைகோ—அதை நவம்பர் 12 சென்னை செயற்குழுவிலேயே கண்டித்தோம்..வைகோ அடங்கவில்லை..தொடர்ந்து அவரின் அநாகரீகம் தொடர்கிறது..

நவம்பர் 27 சென்னை பொதுக்கூட்டத்தில், மீண்டும் அவர் பேசிய விதம், விஷயம், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டித்திருக்கப்பட வேண்டிய விஷயம்..

மாறாக– பலமுறை எச்சரித்தும், எல்லை மீறிய வைகோவை, அவருக்கு புரியும் மொழியில், ராஜா எச்சரித்தது தான் தவறா?

ஜி.ராமகிருஷ்ணனும், இளங்கோவனும், மணியனும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதற்கு காரணம், அவர்களுடைய "தோலின் சென்சிவிட்டி"–அவ்வள்வுதான்..

இன்னும் நிறைய பாஜக எதிர்ப்பு கட்சிகள் வைகோவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம்..

தலைவனை காக்க வேறு வழியில்லாமல் அவரது தொண்டர்கள் சிலரும் ராஜா வீட்டை முற்றுகை இட்டு பரபரபேற்றலாம்..

ஆனால் ஒன்று..வைகோ உணர்ச்சிவயப்படுதலிலேயே காலத்தை ஓட்டுபவர்..தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் வைகோவிற்கு, இப்போது பாஜக கூட்டணி– சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளது.

வைகோ எப்போதும் "அதிர்ஷ்ட்ட கட்டை" என்பார்கள்..இந்த சனிப்பெயர்ச்சி வைகோவிற்கு சரியில்லை போலும்..அதனால்தான் அவர்து "நாக்கில் நர்தனமாடி" இப்படி சனி ஊறு விளைவிக்கிறான்..

எதுவாயினும், 70 வயதை கடந்துவிட்ட வைகோவிற்கு இனி எதிர்காலம் எப்படி இருந்தால் என்ன?
என்னுடைய கவலை எல்லாம் அவரையே நம்பி இருக்கும்..திறமை மிக்க நல்லுள்ளம் கொண்ட பல ஆயிரம் தொண்டர்களை பற்றியதுதான்..

போகிற போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போக முடியாது வைகோ–புரிஞ்சுக்குங்க—

.எஸ்.ஆர்.சேகர்
மாநில பொருளாளர்–பாஜக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...