ஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம்தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,'' என்று, அமைச்சர் நிதின் கட்காரி, தெரிவித்துள்ளார்.
ராஜ்ய சபாவில், வர்த்தக கப்பல் போக்கு வரத்து திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கொண்டுவந்து பேசியதாவது , 'குளச்சல் துறைமுகம், மிகமிக, முக்கியமான துறைமுகம். ஆசியாவிலேயே, மிகவும் இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்த துறை முகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டும் என்றால், அங்கு ஆழப்படுத்தும் பணிகளை மேற்கொண்டாக வேண்டும். 12 அடி அல்லது 14 அடி ஆழப்படுத்துவதற்கே கூட, பல ஆயிரம் கோடி, நிதிசெலவிட வேண்டும். இந்நிலையில், குளச்சல் துறைமுகம், நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது; கைவசம் உள்ள, அந்த துறைமுகத்தை மேம்படுத்த, மத்திய அரசு உதவிசெய்து, அதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்,'' என்றார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.