ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் எதிரானதல்ல

 ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் எதிரானதல்ல. நாம் பல்வேறு யுத்தங்களை பற்றி படித்துள்ளோம். வெற்றி என்பது தர்மம், நியாயம், உண்மைக்குதான் கிடைத்துள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி பேசினார்.

ராஜேந்திர சோழன் முடிசூட்டிய 1000–ம் ஆண்டு விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தஞ்சை திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய பொதுச் செயலாளர் சுரேஷ்பையாஜி ஜோஷி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நமது தேசத்தில் மகத்தான சாதனைகளை செய்து பலநாடுகளுக்கு நமது அன்பு, பண்பாட்டை கொண்டுசென்று அங்கு பேரரசை நிறுவிய மன்னர்கள் வாழ்ந்த பூமி இந்த தஞ்சை. அந்த வகையில் ராஜேந்திர சோழனின் முடிசூட்டிய 1000–ம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம். நமது பயிற்சியில் தினமும் மன்னர்கள், சுதந்திர போராட்டவீரர், தியாகிகளை நினைவு கூறுகிறோம். அந்த வகையில் ராஜேந்திர சோழனையும் தினமும் நினைவு கூறுகிறோம்.

ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் எதிரானது அல்ல. நாம் பல்வேறு யுத்தங்களை குறித்து படித்துள்ளோம். வெற்றி என்பது தர்மம், நியாயம், உண்மைக்குதான் கிடைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். யாரையும் எதிர்க்காமல் 90 ஆண்டாக சேவைசெய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் எதிரி கிடையாது. இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். யாரையும் எதிர்க்கும் எண்ணம் நமக்கு கிடையாது.

ஆர்.எஸ்.எஸ். யாரையும் எதிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு அல்ல. நாட்டில் இந்து சமூகத்தில் ஒற்றுமையை உருவாக்க நேர்மையான வழியில் பணியாற்றி வருகிறோம். அந்தவகையில் நாம் தொடர்ந்து பணியாற்றி வளர்ச்சி பெற்றுவருகிறோம்.

உலக வரைபடத்தில் பலநாடுகள் உள்ளன. அதில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு என்று தனி நாடுகளை குறிப்பிட முடியும். ஆனால் இந்துக்களுக்குரிய நாடு பாரத நாடு மட்டும்தான். இது இந்து நாடுதான். நமது நாட்டில் எத்தனையோ வழிபாட்டு தலங்கள் உள்ளன. நமது நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கை குறையும் போதோ அல்லது பலவீனப் படும் போதோ நாடு திண்டாட்டம் அடைகிறது. இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் நாடு சக்திவாய்ந்த நாடாக வளரும். இந்துக்களை ஒற்றுமை, சக்தி, சாமர்த்தியம் நிறைந்தவர்களாக ஆக்குவதுதான் நாட்டை பாதுகாப்பதற்கான வழி. அதைத் தான் ஆர்.எஸ்.எஸ். செய்கிறது.

நாட்டில் பலபிரச்சினைகள் உள்ளன. மொழி, சாதி, சம்பிரதாயம், வழிபாடுகளில் பல பிரிவினைகள் உருவாகிவருகிறது. பிளவுபட்ட சமுதாயத்தை ஒற்றுமை ஆக்கவேண்டும். அப்போதுதான் நாம் சவால்களை தாண்டி வெற்றி அடைய முடியும். நமது நாட்டில் ஏற்படும் பிரச்சினை நமது வாழ்வோடு சம்பந்தப்பட்டவை. நாட்டில் உள்ள அனைவரையும் சார்ந்தவை. எனவே நாட்டில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து பார்க்கவேண்டும். அப்போதுதான் சக்தி ஏற்படும். எனவே இதில் 2 வித கருத்துகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...