விமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற ராமதாசின் கருத்து பா.ஜ., கூட்டணியை விட்டு விலகி போனவர்களுக்குதான்

 பிரதமர் நரேந்திர மோதி , விமர்சனத்துக்கு அப்பாற் பாட்டவர் அல்ல என்ற , பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கருத்தில், எனக்கும் உடன்பாடு உண்டு,'' என்று , பா.ஜ.க, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், பாஜக.,வுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்த இல.கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.,வில், ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கட்சித் தலைவர் முதல் தொண்டர்வரை, உறுப்பினர் பொறுப்பை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அதற்கான பணி, தற்போது, நாடுமுழுவதும் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே, 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதை, ஒரு கோடியாக மாற்ற, நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

திருச்சி மாவட்டத்தில், ஒரேநாளில், ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில், 18 வயது நிரம்பியவர்களிடம், பா.ஜ.,வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நல்லவரவேற்பு உள்ளது. உறுப்பினர்களை சேர்க்க, வீடு வீடாக செல்லும்போது, பா.ஜ., நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு எதுவும் வரவில்லை.

"பிரதமர் நரேந்திர மோதி , விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல' என ராமதாஸ் கூறியகருத்தில், எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், விமர்சனங்கள் நாகரீகமான முறையில் இருக்கவேண்டும் எனவும், ராமதாஸ் கூறியுள்ளார். இந்த கருத்து பா.ஜ., கூட்டணியைவிட்டு விலகி போனவர்களுக்குதான்; எங்களுக்கு அல்ல.

ஸ்ரீரங்கம் தொகுதியில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியிருப்பது, இடைத் தேர்தலுக்கான தயாரிப்பாக கூட இருக்கலாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்த கருத்தை, யார் முன் வைக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், பா.ஜ., இறுதிமுடிவு இருக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...