மீனவ குரு

 பாரதியார் எங்கே போனாலும் ராகத்துடன் பாட ஆரம்பித்து விடுவார். ராகம், தாளம், மாறாமல் நல்ல இசை நயத்துடன் பாடுவார்.

ஒருநாள் அவர் தன் மனைவி செல்லம்மாளுடன் கடற்கரைக்குச் சென்றார். அந்த மாலை நேரச் சூழலும் கடலும் அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. தாளம் போட்டு, ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.

கடற்கரையில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பாரதியாரை நெருங்கி வந்து சுற்றி அமர்ந்தது. அவரது இசையை ரசிக்கத் தொடங்கினார்கள்.

திடீரென வேறொரு பாட்டுச் சத்தம் பக்கத்தில் கேட்டது. கரைக்குப் படகை ஒட்டிக் கொண்டு வந்த ஒரு மீனவன் தன்னை மறந்து பாடிக் கொன்டிருந்தான்.

பாரதியாரைச் சுற்றி இருந்து பாட்டைக் கேட்டு கொண்டிருந்த குழந்தைகள் முதலில் எழுந்து மீனவனை நோக்கி ஓடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியவர்களும் எழுந்தனர்.

பாரதியாரும் தன் பாட்டை நிறுத்தினார். கையில் ஒரு தாளை எடுத்துக்கொண்டு மீனவன் அருகே சென்று, அவன் பாடும் பாட்டின் வரிகளை எழுதத் தொடங்கினார். அவன் பாடி முடித்தான்.

அவன் அருகே சென்ற பாரதியார் அவனைப் பாராட்டி, "ஐயா! நீ என் குரு" என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் "என்ன பாரதி! உங்க புலமை, இசை ஞானம் என்ன? இவரைப் போய் குரு என்கிறீர்களே!" என்று கேட்டனர்.

அதற்கு பாரதி, 'உலகத்திலே எந்த இசை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறதோ அது தான் உயர்ந்தது. அது யாராக இருந்தாலும் அவர்களை நான் குருவாக மதிக்கிறேன்.

இந்த மீனவ நண்பனின் பாடு, ராகம், தாளம் கட்டுக்கோப்பை மீறி இருந்தாலும் அது பொதுமக்களைக் கவர்ந்து இழுக்கிறதே!" என்றார்.

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...