மேற்கு வங்க சாரதா நிதிநிறுவன மோசடி

 ஊர்ப்பணத்தில் பித்தலாட்டம், ஊர் நடுவே வாலாட்டம்!
சாரதா நிதி நிறுவன மோசடியில் மம்தா இதுவரை நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், விசாரணை வட்டத்துக்குள் வெகு விரைவில் அவரும் வரக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே, இப்போதே தற்காப்புக்காக காற்றில் கத்தி வீசத் துவங்கிவிட்டார். அரசியல் எதிரிகளைப் பழிவாங்க மத்தியிலுள்ள மோடி அரசு சாரதா நிதி நிறுவன மோசடியை பயன்படுத்துவதாக அவர் விமர்சித்து வைகிறார்.

மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர். தவிர, 'வகுப்புவாத' மோடி அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற தலைவியாகவும் மம்தா திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு சாரதா நிதி நிறுவன மோசடியின் முழு விவரங்களையும் தெரியப்படுத்துவது விஷயம் அறிந்தவர்களின் கடமையாகும். ஏனெனில், இது ஏதோ மேற்கு வங்க மாநிலம் மட்டும் தொடர்புடைய விவகாரம் அல்ல. சற்று ஏமாந்தால் நமது பகுதியிலும் கூட இத்தகைய மோசடிகள் அரங்கேற்றக் கூடும்.

பின்புலம்: சாரதா நிதி நிறுவன மோசடி இதன் ஒட்டுமொத்த உத்தேச மதிப்பீடு ரூ.30,000 கோடி. இதனால் நேரடியாக 17 லட்சம் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்துக்கு மேற்கு வங்கம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் கிளைகள் இருந்தன.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு 200-க்கு மேற்பட்ட கிளைகளுடன் இயங்கிய சாரதா நிதி நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 16,000. இந்நிறுவனம் 2013, ஏப்ரலில் திவாலானதாக அறிவிக்கப்பட்டபோது மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் நிதிச் செயல்பாடுகள் முடங்கின.

இதனை பணச்சுழற்சி முறை மோசடி என்று சொல்லலாம். அதாவது, நீங்கள் இதில் ஒருமுறை முதலீடு செய்தால்,ஒரு முதலீட்டாளராக ஆவீர்கள். பிறகு நீங்கள் ஐந்து பேரை இதற்கு அறிமுகப் படுத்துவதன் மூலமாக நீங்களும் இதன் முகவராக ஆகலாம். உங்களுக்கு 25 சதவீதம் தரகுத்தொகை உடனடியாக வழங்கப்படும். நீங்கள் சேர்த்துவிட்ட முதலீட்டாளர்களும் அதேபோல முகவர்களாக ஆகும்போது நீங்கள் கண்காணிப்பாளராகிறீர்கள். அதற்கு தனியே தரகுத் தொகை கிடைக்கு. இந்த சங்கிலித் தொடர் அப்படியே தொடரும்போது, நிதி நிறுவனத்துக்கு எந்த முயற்சியும் இல்லாமல் கோடிக் கணக்கில் பணம் கொட்டும். வாடிக்கையாளர்களின் பணத்திலிருந்தே அவர்களுக்கு தரகுத் தொகை லட்சக்கணக்கில் கொட்டப்படும். இது ஒரு மாயவலை.

'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' எனப்படும் இந்தத் தந்திரத்தால், நாட்டில் ஒரு புள்ளியில் இந்த தொடர் சங்கிலி நின்றுதான் ஆக வேண்டும். அப்போது தான் முதலீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர முடியும். இதிலும் கூட சங்கிலியில் கடைசிக் கண்ணிகளுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது தான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், இப்படியெல்லாம் நடக்கும் என்று பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு அமைப்பான செபி, மத்திய வங்கி, அமலாக்கத்துறை ஆகியவை மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளன. ஆனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி மத்திய அரசும், மேற்கு வாங்க மாநில அரசும் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கான காரணத்தை இப்போதுதான் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

இந்த மோசடியில் தொடர்புடைய பெருந்தலைகள் பலவும் முன்னாள் காங்கிரஸ்காரர்கள்; இன்னாள் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள். மாநிலத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சியிலும் கூட சாரதா நிறுவன அபிமானிகள் இருந்துள்ளனர். எல்லாம் பணம் படுத்தும் பாடு.
ஒரு எல்லைக்கு மேல் நிதி நிறுவனம் வளரும் போது அரசியல்வாதிகளின் தயவு இன்றியமையாததாகி விடுகிறது. அப்போது கையூட்டும், பங்களிப்பும் அரசியல்வாதிகளுக்கு கொடுத்தாக வேண்டியிருக்கிறது. எனவே அரசியல்வாதிகளே நிதிநிறுவனம் நடத்துவது பாதுகாப்பானதாக மாறிவிட்டது. சாரதா நிதி நிறுவனத்தின் பிரமுகர்கள் பலரும் ஆளும் கட்சியின் பிரமுகர்களாக இருப்பதில் வியக்க ஒன்றுமில்லை.

சுதிப்தோ சென்: சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர். இவரது பூர்வீகப் பெயர் சங்கர் ஆதித்ய சென். இளமையில் இவர் நக்சலைட் ஆதரவாளர். (சிங்கூர் விவகாரத்தில் மம்தாவுக்கு நக்சல்கள் ஆதரவு தெரிவித்ததை நினைவில் கொள்ளவும்). 1990-களில் முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, சுதிப்தோ சென் என்ற புதிய நாமகரணத்துடன், மேற்கு வங்கத்தில் சீட்டு நிறுவனங்களைத் துவக்கினார். பின்னாளில் இவர் பெரும் ஊடக சக்கரவர்த்தியாகவும் மாறினார். தான் நடத்திய சேனல் 10 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் சேமநல நிதியை செலுத்தாத முறைகேட்டுக்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டு 2014, பிப்ரவரியில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இப்போது சிறையில் பாதுகாப்பாக இருக்கிறார்.

தனது சேனல் 10 நிறுவனத்தை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக, திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி. குணால் கோஷ் மீது இவர் கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தயது.
தேவ்ஜனி முகர்ஜி: நிதி நிறுவன வரவேற்பாளராக பணியில் நுழைந்த இந்த இளம்பெண் வெகு விரைவில் நிறுவனத் தலைவரின் அபிமானத்தைப் பெற்று செயல் இயக்குனராக உயர்ந்தார். மக்கள் பணம் எவ்வாறு கலைக்குப் பாய்ந்தது என்பதற்கு இது ஓர் உதாரணம். தேவ்ஜனி முகர்ஜி கையெழுத்திட்டால் தான் சாரதா நிதிநிறுவன காசோலைகள் செல்லுபடியாகும் நிலை இருந்தது. இப்போது சுதிப்தோ சென்னுடன் சேர்ந்து ஐவரும் சிறையில் இருக்கிறார்கள்.

குணால் கோஸ்: அடிப்படையில் அரசியல்வாதி. மம்தாவின் நம்பிக்கைக்குரியவர். கட்சியின் ராஜ்யசபா எம்.பி. இவை தான் இப்போது சேனல் 10-ன் நிர்வாக இயக்குநர். இதனை சுதிப்தோ சென்னிடம் இருந்து மிரட்டி வாங்கவில்லை என்கிறார். 'சங்க்பத் பிரதிதின்', 'சகல்பேலா' என்ற தினசரி பத்திரிகைகளுக்கு ஆசிரியரான இவர், சாரதா நிதி நிறுவனத்தின் பிரத்யேக ஊடகத்துக்கும் தலைவராக இருந்தார். அதற்காக இவருக்கு மாதம் ரூ.16 லட்சம் சம்பளம்! 2011 சட்டசபை தேர்தலில் மம்தா கட்சி வெல்ல இவர் மிக முக்கிய பிரசாரகராக இருந்தார். எனினும், இவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து 2013, செப்டம்பர் 29-ல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது சி.பி.ஐ. வழக்கில் ஐவரும் பிரதானக் குற்றவாளி. கைதாகி சிறையில் இருக்கிறார்.

ஸ்ரீஞ்ஜெய் போஸ்: திரிணாமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர்; ராஜ்யசபை எம்.பி. மம்தா குறித்து வங்க மொழியில் இவர் எழுதிய 'மகாரனே மம்தா' புத்தகம் பிரசித்தமானது. 'சங்க்பத் பிரதிதன்' பத்திரிக்கையின் ஆசிரியர் குழு தலைவராகவும் ஸ்ரீஞ்ஜெய் போஸ் இருந்தார். கடந்த நவம்பர் மாதம் இவரை சி.பி.ஐ.கைது செய்தது.

ரஜத் மஜூம்தார்: மேற்கு வங்க முன்னாள் காவல்துறை தலைவர் (டி.ஜி.பி), முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பணி ஓய்வுக்குப் பிறகு சாரதா நிதி நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகரானார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரகாவும் இவர் உள்ளார். ஐவரும் இப்போது கைதாகி இருக்கிறார்.

மதன் மித்ரா: மேற்கு வாங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சர். இவர் கைதானபோது தான் மம்தா கோபத்தின் உச்சிக்குச் சென்றார். வலை மெல்ல இறுகுவதை மம்தா உணர்ந்துகொண்டார். எனவே தான் மோடிக்கு எதிரான போராளியாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயல்கிறார். மதன் மித்ரா சாரதா நிதி நிறுவன ஊழிய சங்கத்தின் தலைவராக இருந்ததுடன், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மிக்க உறுதுணையாக இருந்தார். இப்போது சுதிப்தோ சென்னுக்கு உறுதுணையாக சிறையில் இருக்கிறார்.

மேற்கு வாங்க மாநில ஜவுளித் துறை அமைச்சர் சியாமா பாத முகர்ஜியின் நஷ்டத்தில் முடங்கிய சிமென்ட் தொழிற்சாலையை சாரதா நிதி நிறுவனம் வாங்கியது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிறந்த ஓவியர். அவரது ஓவியங்களை ரூ.1.86 கோடிக்கு வாங்கியுள்ளார் சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தோ சென்.

அஸ்ஸாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் (காங்கிரஸ்) மனைவி மதங் சிங்கிற்கு ரூ.25 கோடி தொகையை எந்த கணக்கும் இல்லாமல் வழங்கி இருக்கிறது சாரதா நிதி நிறுவனம்.
கொல்கத்தாவில் கால்பந்து விளையாட்டு மிகப் பிரபலம். எனவே, அங்குள்ள மோகன் பகான் உள்ளிட்ட பல எதிரெதிர் அணிகளுக்கும் 'ஸ்பான்சர்' செய்யும் நிறுவனமாக சாரதா நிதி நிறுவனம் மக்கள் பணத்தை வாரி, இறைத்துள்ளது. 2010-ல் மட்டும் இவ்வாறு ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மட்டுமல்லாது, ஜார்க்கண்ட், ஓடிஸா, அஸ்ஸாம், 'சத்தீஷ்கர், திரிபுரா மாநிலங்களிலும் சாரதா நிதி நிறுவனத்தின் வலைப்பின்னல் படர்ந்திருக்கிறது. திரிபுரா அரசும், இதனை சி.பி.ஐ. தீர விசாரிக்க வேண்டும் என்று கோரியது.

ஒரு நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் முதலீட்டாளர்களாக இருக்க முடியாது, என்பதை சுட்டிக்காட்டி, நிறுவன விதிமுறைகளை சாரதா நிதி நிறுவனம் மீறுவதை 2009-ல் செபி கண்டித்தவுடன், 200 புதிய நிறுவனங்களைத் துவக்கியது அந்நிறுவனம்.

பிரச்சனையின் வேகத்தைக் குறைக்க மம்தா அறிவித்த 4 உறுப்பினர் விசாரணை குழு, சி.பி.ஐக்கு ஆதாரங்கள் கிடைப்பதைத் தடுக்கவே முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. 1982-ம் வருடத்திய சீட்டு நிறுவன கட்டுப்பாட்டு சட்டத்தைக் கொண்டு வழக்கை திசை திருப்பவே மாநில அரசு முயற்சிக்கிறது.

யாருக்கு லாபம்? பயன் அடைந்த பலரும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
பணச்சுழற்சி முறையால் செய்யப்படும் முதலீடுகள் உடனடியாக கவர்ச்சிகரமான லாபம் அளிப்பதாகத் தோன்றினாலும், இறுதியில் முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றன. இந்த சங்கிலிக் கண்ணி முறையால் லாபம் அடைவோர் வேறு துறைகளில் முதலீடு செய்து தப்பிக் கொள்கின்றனர். அவர்களுக்கு அரசியல் போர்வையும் முகமூடியாகப் பயன்படுகிறது. இதையே சாரதா நிதி நிறுவன மோசடி காட்டுகிறது.

எனவே, நிதி சுழற்சி திட்டங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். நிதி மோசடியில் தொடர்புடைய அரசியல்வாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்.

நன்றி : விஜய பாரதம்
– சேக்கிழான்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...