பொய்யை பரப்பும் மம்தா

 மேற்கு வங்கத்தில் ரூ.2.43 லட்சம் கோடி முதலீடுசெய்ய தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக மாநில முதல்வர் மம்தாபானர்ஜி வெளியிட்ட தகவல்கள் தவறானது என்று பாஜக விமர்சித்துள்ளது.

கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தொழில் நிறுவனங்கள் மேற்குவங்கத்தில் முதலீடு செய்ய உள்ள தொகையை மம்தாபானர்ஜி தெரிவித்தார்.

அதை மேற்குவங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹா மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் சில நிறுவனங்கள் ரூ.2.43 லட்சம் கோடி முதலீடுசெய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் ரூ.1.14 கோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் வழியாக வரும் முதலீடாகும்.

மேலும், ரூ.77 ஆயிரம் கோடிக்கு குடியிருப்புகள் கட்டுவதையும், ரூ.7,000 கோடிக்கு தொழில்பூங்கா கட்டுவதையும் மம்தா குறிப்பிட்டார். அதை தொழில் துறை முதலீடாகக் கருதக் கூடாது.

மேற்குவங்கத்தில் நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை, குஜராத் மாநாட்டுடன் ஒப்பிடமுடியாது.

சாரதா நிதி நிறுவன மோசடி காரணமாக திரிணமூல் காங்கிரஸின் செல்வாக்கு மக்கள்மத்தியில் வேகமாக சரிந்து வருகிறது. நன்கொடை என்ற பெயரில் போலியான வங்கி கணக்குகள் மூலம் திரிணமூல் காங்கிரஸூக்கு பணம் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மக்களவை தேர்தலின் போது, கட்சியின் வருமானம் குறித்து பொய்யான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸார் சமர்ப்பித்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...