புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கு நிதி தேவை

 ரயில்வே துறை நிதி சிக்கலில் இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் பொருளாதாரம் தொடர்பாக நடந்த மாநாட்டில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: ரயில்வே துறையில் நிதி போதுமானதாக இல்லை. இந்த துறை நிதி சிக்கலில் உள்ளது. இதை

மேம்படுத்துவதற்கும், புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கும் நிதி தேவை. பயணிகள் போக்குவரத்து தவிர, சரக்கு போக்குவரத்துக்கும் வசதியாக 30 முதல் 40 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதையை விரிவு படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரயில்வே துறை 2.5 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. அதே நேரத்தில், இத்தகைய துறைகளில் முதலீடு செய்வதற்கு போதுமான நிறுவனங்கள் இல்லை. முதலீட்டை அதிகரிக்க பென்ஷன் திட்டங்கள் உதவிகரமாக உள்ளன.

அதுமட்டுமின்றி நக்சல் தாக்குதல் உள்ள பகுதிகளில் ரயில்களில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். இது போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் முதலீடு அதிகரிப்பதோடு வேலை வாய்ப்பும் பெருகும். நாட்டின் பொருளாதாரத்தை தற்போதுள்ள 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரில் இருந்து 20 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கனவு விரைவில் நிறைவேறும். மறு சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து கணக்குகளும் ஒரே இடத்தில் வைத்து கண்காணிப்பதன் மூலம், வீண் செலவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும். அதோடு ஒவ்வொரு ஒரு ரூபாயும் உபயோகமான வழியில் செலவிடுவது உறுதி செய்யப்படும். இதனால் வருவாயும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு இலக்கும் வரிசைப்படி எட்டப்பட்டு, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை அடையலாம். நிர்ணயித்த இலக்கை அடைவதற்கான உத்திகளை மோடி தலைமையிலான அரசு ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு சுரேஷ் பிரபு பேசினார். –

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...