புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கு நிதி தேவை

 ரயில்வே துறை நிதி சிக்கலில் இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் பொருளாதாரம் தொடர்பாக நடந்த மாநாட்டில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: ரயில்வே துறையில் நிதி போதுமானதாக இல்லை. இந்த துறை நிதி சிக்கலில் உள்ளது. இதை

மேம்படுத்துவதற்கும், புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கும் நிதி தேவை. பயணிகள் போக்குவரத்து தவிர, சரக்கு போக்குவரத்துக்கும் வசதியாக 30 முதல் 40 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதையை விரிவு படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரயில்வே துறை 2.5 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. அதே நேரத்தில், இத்தகைய துறைகளில் முதலீடு செய்வதற்கு போதுமான நிறுவனங்கள் இல்லை. முதலீட்டை அதிகரிக்க பென்ஷன் திட்டங்கள் உதவிகரமாக உள்ளன.

அதுமட்டுமின்றி நக்சல் தாக்குதல் உள்ள பகுதிகளில் ரயில்களில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். இது போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் முதலீடு அதிகரிப்பதோடு வேலை வாய்ப்பும் பெருகும். நாட்டின் பொருளாதாரத்தை தற்போதுள்ள 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரில் இருந்து 20 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கனவு விரைவில் நிறைவேறும். மறு சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து கணக்குகளும் ஒரே இடத்தில் வைத்து கண்காணிப்பதன் மூலம், வீண் செலவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும். அதோடு ஒவ்வொரு ஒரு ரூபாயும் உபயோகமான வழியில் செலவிடுவது உறுதி செய்யப்படும். இதனால் வருவாயும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு இலக்கும் வரிசைப்படி எட்டப்பட்டு, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை அடையலாம். நிர்ணயித்த இலக்கை அடைவதற்கான உத்திகளை மோடி தலைமையிலான அரசு ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு சுரேஷ் பிரபு பேசினார். –

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...