வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப் படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜன்தன் யோஜனா திட்டத்தை செயல் படுத்துவதில் தனித்துவமான சேவையை புரிந்த வங்கி ஊழியர்களை பாராட்டி அவர் களுக்கு கடிதம் எழுதியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, 99.74 சதவீத குடும்பத்தினர் இந்த திட்டத்தின்கீழ் வங்கி கணக்கை துவங்கி விட்டதாகவும் நிர்ணையிக்கபட்ட இலக்கைவிட இந்த எண்ணிக்கை தாண்டியுள்ளதாகவும் மேலும் பல திட்டங்களில் நேரடியாக பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதை விரிவுபடுத்துவதை அரசு உறுதிப் படுத்தும் என்று தெரிவித்தார்.

வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் உங்களின் அசாதாரண உழைப்பை பார்க்கையில் எனக்கு மிகுந்தமகிழ்ச்சி அளிக்கிறது. இந்ததிட்டம் 26 ஜனவரி 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்ற நிர்ணையிக்கப்பட்டிருந்த இலக்கைவிட கடந்துள்ளது. மிக குறுகிய காலத்திற்குள் 11.5 கோடி புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 99.4 சதவீத குடும்பத்தினரை இந்ததிட்டம் இணைத்துள்ளது. உங்களின் தனித்துவமான உழைப்பிற்காக உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதார் கார்டுடன் ஓவ்வொருடைய வங்கிகணக்கு எண் பதிவு செய்வதை உறுதிப்படுத்த நீங்கள் உழைக்க வேண்டும். இது அனைத்து வங்கிகணக்கு எண்ணுக்கும் செயல்படுத்த வேண்டும். வங்கிகணக்கு தொடங்குவதில் காட்டிய அதே ஆர்வத்தோடு இதிலும் நீங்கள் முனைப்புடன் செயல்படுவீர்கள் என நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...