ராஜஸ்தான் பாரம்பரிய தலைப் பாகை அணிந்து அசத்திய மோடி

 இந்திய கலாசாரத்தையும், ராணுவ வலிமையையும் பறை சாற்றும் விதமாக தில்லியில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் பாரம்பரிய தலைப் பாகை அணிந்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அணியும் உடைகளானகுர்தா, பைஜாமா, வண்ண கதர்த் தலைப்பாகை, கோட்-சூட் ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருந்து வருகிறது.

தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்க ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் சென்றிருந்தபோதும், திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற போதும் பிரதமர் மோடி அணிந்திருந்த உடைகள், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தன.

கடந்த முறை சுதந்திர தின விழாவின்போது அணிந்ததுபோல, குடியரசு தின விழாவிலும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அணியப்படும் பல வண்ண நிறமுடைய தலைப்பாகையை (டர்பன்) பிரதமர் மோடி அணிந்திருந்தார்.

விழா நடைபெற்ற ராஜபாதை பகுதிக்கு "பீஸ்ட்' காரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைத்து வரப்பட்டார். அதிபருடன், அவரது மனைவி மிச்செலும் வந்தார்.

குர்தா அணிய ஒபாமா விருப்பம்: முன்னதாக, தில்லி விமான நிலையத்தில் அதிபர் ஒபாமாவை வரவேற்க சென்றிருந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையான குர்தா பைஜாமா அணிந்திருந்திருந்தார். அன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் பங்கேற்ற ஒபாமா, பிரதமர் மோடி அணியும் குர்தா பைஜாமா போன்று தானும் அணிய விரும்புவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...