ஆம் ஆத்மி கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது

 போலி நிறுவனங்களிட மிருந்து ரூ.2 கோடி நிதிபெற்றிருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்துசென்ற ஏ.ஏ.பி. தன்னார்வ நடவடிக்கைக் குழு (ஆவாம்) என்ற அமைப்பு, ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நான்குபோலியான நிறுவனங்கள் மூலம் ரூ.2 கோடி நிதி பெற்றதாக புகார் கூறியிருந்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இதுகுறித்து கூறும்போது, ''நான்கு போலியான நிறுவனங்களின் பெயரில் தலா ரூ.50 லட்சம் காசோலைகளின் மூலம் ஆம் ஆத்மி ரூ.2 கோடி நிதி பெற்றதன் மூலம் அந்தக்கட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

இது அரசியல் அமைப்பை பயன் படுத்தி கருப்பு பணத்தை கை மாற்றிவிடும் நடவடிக்கையாகும். ஹவாலா பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு இந்தப்போலி நிறுவனங்கள் ஒரு வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது போன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ஒவ்வொருவரும், பிரச்னையை திசைதிருப்புவதற்காக மற்ற அரசியல் கட்சிகள் மீது புகார் கூறுவர். இதைப்போலவே, மூன்று முக்கிய கட்சிகளின் நிதி ஆதாரம் குறித்து விசாரணை கோருவதன் மூலம் பிரச்னையை திசை திருப்பும் தந்திரத்தை ஆம் ஆத்மி கையாளுகிறது.

இந்த விவகாரம் சட்ட அமைப்புகளின் கவனத்திற்குச் செல்லும் போது, அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்வார்கள் என்று உறுதியளிக்கிறேன். மேலும், போலி நிறுவனங்களின் பின்னணியில் இருப்பது யார்? அவர்களுடைய நிதி ஆதாரம் என்ன? என்பதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.