ஆம் ஆத்மி கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது

 போலி நிறுவனங்களிட மிருந்து ரூ.2 கோடி நிதிபெற்றிருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்துசென்ற ஏ.ஏ.பி. தன்னார்வ நடவடிக்கைக் குழு (ஆவாம்) என்ற அமைப்பு, ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நான்குபோலியான நிறுவனங்கள் மூலம் ரூ.2 கோடி நிதி பெற்றதாக புகார் கூறியிருந்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இதுகுறித்து கூறும்போது, ''நான்கு போலியான நிறுவனங்களின் பெயரில் தலா ரூ.50 லட்சம் காசோலைகளின் மூலம் ஆம் ஆத்மி ரூ.2 கோடி நிதி பெற்றதன் மூலம் அந்தக்கட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

இது அரசியல் அமைப்பை பயன் படுத்தி கருப்பு பணத்தை கை மாற்றிவிடும் நடவடிக்கையாகும். ஹவாலா பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு இந்தப்போலி நிறுவனங்கள் ஒரு வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது போன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ஒவ்வொருவரும், பிரச்னையை திசைதிருப்புவதற்காக மற்ற அரசியல் கட்சிகள் மீது புகார் கூறுவர். இதைப்போலவே, மூன்று முக்கிய கட்சிகளின் நிதி ஆதாரம் குறித்து விசாரணை கோருவதன் மூலம் பிரச்னையை திசை திருப்பும் தந்திரத்தை ஆம் ஆத்மி கையாளுகிறது.

இந்த விவகாரம் சட்ட அமைப்புகளின் கவனத்திற்குச் செல்லும் போது, அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்வார்கள் என்று உறுதியளிக்கிறேன். மேலும், போலி நிறுவனங்களின் பின்னணியில் இருப்பது யார்? அவர்களுடைய நிதி ஆதாரம் என்ன? என்பதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...