தமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியலையும், ஆரோக்கியமான அரசியலையும், பா.ஜ.க. எடுத்துச் செல்லும்

 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல பல கருத்து பரிமாற்றங்கள், அரசியல் சூழல் பற்றிய ஆராய்ச்சி, வருங்காலத் தேர்தலுக்கான அளவு கோலா? பா.ஜ.க. உண்மையான மாற்று சக்திதானா? இப்படி பல பல கேள்விகள்… இதில்

எனக்குள்ள வியப்பு விமர்சனம் செய்பவர்கள் பலர் களத்தில் இறங்காமல் ஊழலுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பலமாக பதிவு செய்யக்கூட முடியாதவர்கள் முடிவைப் பற்றி பேசுகிறார்கள்.

பா.ஜ.க.வைப் பொறுத்த மட்டில் எதிர்ப்பைத் தெரிவிக்க பலமாக களம் இறங்கினோம். வெற்றியைப் பெறுவதற்கும் பணம் செலவிடப்பட்டது. டெப்பாசிட்டைத் தக்க வைக்கவும் பணம் செலவிடப்பட்டது. இந்தத் தேர்தல் முடிவுகளை வருங்கால அரசியலுக்கோ, வருங்காலத் தேர்தலுக்கோ, ஓர் அளவீடாகவும், குறியீடாகவும் எடுத்துக்கொள்ள முடியாது! வெற்றி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் நம்பத்தகுந்ததல்ல. தோல்வியடைந்தவர்கள் எடுத்த வாக்குகள் உண்மையான குறியீடுகள் கிடையாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை விட வளர்மதி எம்.எல்.ஏ., அதிகம் வாக்குகள் பெற்றிருக்கிறார். அப்படியென்றால் முன்னாள் முதல்வரை விட வளர்மதி அதிகம் பலமானவரா? இல்லை என்றால் மக்கள் ஆதரவை, அவரைவிட இவர் அதிகம் பெற்றிருக்கிறாரா? எனவே இந்த வாக்குகள் உண்மையான குறியீடு அல்ல.

எனவே பா.ஜ.க. பலவீனமடைந்து விட்டது என்ற விவாதத்தை முற்றிலுமாக மறுக்கிறேன். இன்று திராவிடக் கட்சிகளுடன், களத்தில் நிற்கக் கூடிய கட்சி நாங்கள் என்பதை உள்ளாட்சி இடைத்தேர்தலுக்குப் பின் மறுபடியும் நிரூபித்திருக்கிறோம். வருங்காலத்திலும் எங்கள் பலத்தை நிரூபிப்போம்.

தமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியலையும், ஆரோக்கியமான அரசியலையும், பா.ஜ.க. எடுத்துச் செல்லும். தமிழகம் முழுவதும் எங்களது உறுப்பினர் சேர்க்கை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பா.ஜ.க.வின் சக்தியை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.

நன்றி ; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...