திமுக.,வின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது

 நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து திமுக. போராட்டம் நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனை, சென்னை கமலாலயத்தில் நேற்று மாலை இங்கிலாந்து நாட்டு துணைதூதரக அரசியல்துறை அதிகாரிகள் சோப்பர், கூக், பெர்னாண்டஸ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். பின்னர், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று நீதிபதிகள்கூட சுதந்திரமாக பயணம்செய்ய முடியாத நிலை உள்ளது. நேர்மையான அதிகாரிகளும் பணிசெய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. தென் மாவட்டங்களில் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு சாதிகலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன் கூட்டியே தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவை பாஜக. நிறைவேற்றிய நிலையில், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் நேற்று திமுக. போராட்டமும் நடத்தியுள்ளது. திமுக. போராட்டம் நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, மத்திய ஆட்சியில் திமுக. அங்கம்வகித்தது. அன்று வாய் மூடி இருந்து விட்டு, இன்று சட்ட மசோதாவை நிறைவேற்றும்போது விமர்சனம் செய்கிறார்கள். 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பை அதிகம் ஏற்படுத்தவே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளர்ச்சியடையும் கட்சியாக பாஜக. உள்ளது. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணைந்துவருகிறார்கள். தமிழகத்தில் தேசியம் திரும்பிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை (இன்று) அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக. கலந்துகொள்ளும்.

தமிழக பட்ஜெட் விரைவில் வெளியிட இருக்கிறது. டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் பட்ஜெட் இருக்கவேண்டும். தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...