யாரோ எழுதிய வசனத்தை சினிமாவில் பேசலாம்! அரசியலில் பேசக்கூடாது !!

 தாம்பரத்தை தாண்டி தாமரையை தெரியாது குஷ்பூ பேசியிருப்பதன் மூலம் அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது. இவ்வளவு கிட்டப் பார்வை உள்ளவர் என்பது இப்போது தான் தெரிகிறது.

தாம்பரத்தை தாண்டியும் தாமரை வளர்ந்து இருக்கிறதா? எல்லைகளை கடந்தும்வளர்ந்து வருகிறதா? என்ற அரசியல் நிலவரங்களை அறிந்துக் கொண்டு பேசுவது தான் அவர் பெற்றுள்ள பதவிக்கு மரியாதை.கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் உள்ளது.

மேட்டுப்பாளையம் எங்கள்வசம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை… என்று வட இந்தியர்கள் பெருமையுடன் சொல்லுமளவுக்கு எல்லா இடங்களிலும் கால்பதித்து இருக்கிறோம்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் திமுகவுக்கு இணையான வாக்குகளை பெற்றுள்ளோம். திமுக, அ.திமுகவுக்கு மாற்றாக பிஜேபி வளர்ந்து இருப்பதை, வளர்ந்து வருவதை மக்கள் கண் கூடாக பார்க்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி பேசியிருப்பர் என்று கருதுகிறேன்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திராணி இல்லை. போட்டிபோடாமல் பயந்து ஓடியவர்கள் அடுத்தவர்களை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை.ஸ்ரீரங்கத்தில் நடந்தவிசயம் நாடறிந்தது. நாங்கள் அந்ததொகுதி நிர்வாகிகளை மட்டுமே வைத்து தேர்தலைசந்தித்து ஊழலுக்கு எதிராக 5 ஆயிரம் வாக்குகளை திரட்டியதை பெருமையாக கருதுகிறோம்.

இவை எதுவுமே தெரியாமல் நன்றி உணர்ச்சியை காட்டுவதற்கு வாய்க்குவந்த வார்த்தை யெல்லாம் பேசக்கூடாது. யாரோ எழுதி கொடுத்த வசனத்தை சினிமாவில் பேசலாம். இது அரசியல். இங்கும் எழுதி கொடுத்த வசனத்தைபேசினால் எடுபடாது. மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.

எங்களை பற்றி விமர்சிக்கும் குஷ்புவால் திமுக.,வை விமர்சிக்க முடியாது. காரணம் இன்னும் பாசம் இழையோடுகிறது. பிஜேபி விமர்சிப்பதற்கு முன்பு உங்கள்பலம் என்ன? எத்தனை லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாவட்ட தலைவர்கள் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள்? வாசன் போய்விட்டார். சிதம்பரம் இருப்பாரா? போவாரா? என்று தெரியவில்லை. இந்தகோஷ்டி அரசியலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அதை சரிப்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். ஒரு இடைத் தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா? இல்லை பொதுத் தேர்தலில்தான் தைரியமாக வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்க முடியுமா? என்ற காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை எல்லாம் கவனியுங்கள்.சினிமா பிரபலமாக இருப்பதால் எதை வேண்டு மானாலும் எப்படியும் பேசலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

நன்றி ; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.