யாரோ எழுதிய வசனத்தை சினிமாவில் பேசலாம்! அரசியலில் பேசக்கூடாது !!

 தாம்பரத்தை தாண்டி தாமரையை தெரியாது குஷ்பூ பேசியிருப்பதன் மூலம் அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது. இவ்வளவு கிட்டப் பார்வை உள்ளவர் என்பது இப்போது தான் தெரிகிறது.

தாம்பரத்தை தாண்டியும் தாமரை வளர்ந்து இருக்கிறதா? எல்லைகளை கடந்தும்வளர்ந்து வருகிறதா? என்ற அரசியல் நிலவரங்களை அறிந்துக் கொண்டு பேசுவது தான் அவர் பெற்றுள்ள பதவிக்கு மரியாதை.கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் உள்ளது.

மேட்டுப்பாளையம் எங்கள்வசம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை… என்று வட இந்தியர்கள் பெருமையுடன் சொல்லுமளவுக்கு எல்லா இடங்களிலும் கால்பதித்து இருக்கிறோம்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் திமுகவுக்கு இணையான வாக்குகளை பெற்றுள்ளோம். திமுக, அ.திமுகவுக்கு மாற்றாக பிஜேபி வளர்ந்து இருப்பதை, வளர்ந்து வருவதை மக்கள் கண் கூடாக பார்க்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி பேசியிருப்பர் என்று கருதுகிறேன்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திராணி இல்லை. போட்டிபோடாமல் பயந்து ஓடியவர்கள் அடுத்தவர்களை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை.ஸ்ரீரங்கத்தில் நடந்தவிசயம் நாடறிந்தது. நாங்கள் அந்ததொகுதி நிர்வாகிகளை மட்டுமே வைத்து தேர்தலைசந்தித்து ஊழலுக்கு எதிராக 5 ஆயிரம் வாக்குகளை திரட்டியதை பெருமையாக கருதுகிறோம்.

இவை எதுவுமே தெரியாமல் நன்றி உணர்ச்சியை காட்டுவதற்கு வாய்க்குவந்த வார்த்தை யெல்லாம் பேசக்கூடாது. யாரோ எழுதி கொடுத்த வசனத்தை சினிமாவில் பேசலாம். இது அரசியல். இங்கும் எழுதி கொடுத்த வசனத்தைபேசினால் எடுபடாது. மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.

எங்களை பற்றி விமர்சிக்கும் குஷ்புவால் திமுக.,வை விமர்சிக்க முடியாது. காரணம் இன்னும் பாசம் இழையோடுகிறது. பிஜேபி விமர்சிப்பதற்கு முன்பு உங்கள்பலம் என்ன? எத்தனை லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாவட்ட தலைவர்கள் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள்? வாசன் போய்விட்டார். சிதம்பரம் இருப்பாரா? போவாரா? என்று தெரியவில்லை. இந்தகோஷ்டி அரசியலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அதை சரிப்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். ஒரு இடைத் தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா? இல்லை பொதுத் தேர்தலில்தான் தைரியமாக வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்க முடியுமா? என்ற காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை எல்லாம் கவனியுங்கள்.சினிமா பிரபலமாக இருப்பதால் எதை வேண்டு மானாலும் எப்படியும் பேசலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

நன்றி ; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...