பருவம் தவறிய மழைகாரணமான இழப்பீடு அதிகரிக்கப்படும்

 பருவம் தவறிய மழைகாரணமாக பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுவரம்பை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், புந்திமாவட்டத்தில் அண்மையில் பெய்த பருவம் தவறியமழை காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்தமாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட திமேலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஜேட்லி கூறியதாவது:

பருவம் தவறியமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்காக, பயிர்ச்சேத இழப்பீட்டு வரம்பை மத்திய அரசு உயர்த்தவுள்ளது. அண்மையில் பெய்தமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்றாகும்.

புந்திமாவட்டத்தில் பயிர்களுக்கு மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு (விவசாயிகள்) மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.

பருவம்தவறிய மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நிதியுதவியும், நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்.

மாநில அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் ஜேட்லி.

முன்னதாக, புந்திமாவட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை அவர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருக்கு பயிர்ச் சேதம் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஆனந்தி எடுத்துக் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...