பருவம் தவறிய மழைகாரணமான இழப்பீடு அதிகரிக்கப்படும்

 பருவம் தவறிய மழைகாரணமாக பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுவரம்பை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், புந்திமாவட்டத்தில் அண்மையில் பெய்த பருவம் தவறியமழை காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்தமாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட திமேலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஜேட்லி கூறியதாவது:

பருவம் தவறியமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்காக, பயிர்ச்சேத இழப்பீட்டு வரம்பை மத்திய அரசு உயர்த்தவுள்ளது. அண்மையில் பெய்தமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்றாகும்.

புந்திமாவட்டத்தில் பயிர்களுக்கு மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு (விவசாயிகள்) மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.

பருவம்தவறிய மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நிதியுதவியும், நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்.

மாநில அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் ஜேட்லி.

முன்னதாக, புந்திமாவட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை அவர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருக்கு பயிர்ச் சேதம் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஆனந்தி எடுத்துக் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...