மோடியின் இலங்கை பயணம் தமிழர்கள் வாழ்வில் மறு மலர்ச்சி

 இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்பட பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் உதவியாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வெளிநாடுகளுடனான இந்திய உறவை மேம்படுத்து வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்க்கொண்டுள்ளார். இதன் விளைவாக இலங்கை போன்ற அண்டை நாடுகள் தவிர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான இந்திய உறவு மேம்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர் ராஜன் பேசியதாவது:

அண்மையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் யாழ்ப் பாணத்துக்குச் சென்றது உலகத் தமிழர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

போரால் பாதிக்கபட்டு நம்பிக்கை இழந்திருந்த இலங்கை தமிழர்களிடையே புதிய நம்பிக்கையை விதைக்கும் வகையில் இப்பயணம் அமைந்திருந்தது. மோடியின் இலங்கைப்பயணம், இன்னல்களால் வாழ்க்கையைத் தொலைத்திருந்த தமிழர்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.

கடந்த 2011-இல் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்க பிரதமர்மோடி நேரடியாக மேற்கொண்ட முயற்சி மீனவர்களிடையே புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

5 மீனவர்களை விடுதலைசெய்து இந்தியா அழைத்து வந்தது, வெளிநாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரை மீட்டது போன்ற சம்பவங்கள் மாநில மக்களிடையே பாஜகவின் செல்வாக்கை உயர்த்தி யுள்ளது.

தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அக்கறையோடு செயல் பட்டால் மாநிலத்தில் பாஜகவை வளர்ப்பது எளிதாக அமையும். பாஜக.,வின் சாதனைகளை தமிழக மக்களிடையே கொண்டுசெல்ல தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...