மோடியின் இலங்கை பயணம் தமிழர்கள் வாழ்வில் மறு மலர்ச்சி

 இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்பட பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் உதவியாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வெளிநாடுகளுடனான இந்திய உறவை மேம்படுத்து வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்க்கொண்டுள்ளார். இதன் விளைவாக இலங்கை போன்ற அண்டை நாடுகள் தவிர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான இந்திய உறவு மேம்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர் ராஜன் பேசியதாவது:

அண்மையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் யாழ்ப் பாணத்துக்குச் சென்றது உலகத் தமிழர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

போரால் பாதிக்கபட்டு நம்பிக்கை இழந்திருந்த இலங்கை தமிழர்களிடையே புதிய நம்பிக்கையை விதைக்கும் வகையில் இப்பயணம் அமைந்திருந்தது. மோடியின் இலங்கைப்பயணம், இன்னல்களால் வாழ்க்கையைத் தொலைத்திருந்த தமிழர்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.

கடந்த 2011-இல் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்க பிரதமர்மோடி நேரடியாக மேற்கொண்ட முயற்சி மீனவர்களிடையே புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

5 மீனவர்களை விடுதலைசெய்து இந்தியா அழைத்து வந்தது, வெளிநாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரை மீட்டது போன்ற சம்பவங்கள் மாநில மக்களிடையே பாஜகவின் செல்வாக்கை உயர்த்தி யுள்ளது.

தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அக்கறையோடு செயல் பட்டால் மாநிலத்தில் பாஜகவை வளர்ப்பது எளிதாக அமையும். பாஜக.,வின் சாதனைகளை தமிழக மக்களிடையே கொண்டுசெல்ல தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...