தேசிய கடமையை நிறைவேற்றும் பயணத்துக்கும் , உல்லாசப் பயணத்துக்கும் வித்தியாசம் உண்டு

 பாராளுமன்றத்தில் நிதிமசோதா நிறைவேறியது. பிரதமரின் சமூகபாதுகாப்பு திட்டங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரிகணக்கு தாக்கல்செய்ய எளியபடிவம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நிதிமசோதா மீதான விவாதத்துக்கு நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர், உலகளவில் பொருளாதார நிலை மந்தமாக இருந்தபோதும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்தியப்பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வருகிறது, ''பிரதமர் தனது பயணத்தின் மூலம் மேக்கிங் இந்தியாவின் குரலை (இந்தியாவில் தயாரிப்போம்) ஒலிக்கச் செய்யும், தேசிய கடமையை நிறைவேற்றி வந்துள்ளார்'' தேசிய கடமையை நிறைவேற்றுவதற்கு பயணம் மேற்கொள் வதற்கும், உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு .

நிலம் கையகப்படுத்தும் சட்டமசோதா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற எதிர்க்கட்சியினரின் பிரசாரத்ம் போய். , ''இது விவசாயிகளுக்கு ஆதரவானது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என தவறாகமுத்திரை குத்தப்பட்டு விட்டது''

வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு 14 பக்க படிவம் நிறுத்தப்பட்டு விட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை நிரப்புவதற்கு ஆலோசகர்களை நாடிச்செல்லாமல், கணக்கு தாக்கல்செய்கிறவரே நிரப்புகிற வகையில், எளிமையான படிவம் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறோம் , விரைவில் அதைக் கொண்டு வருவோம் .

பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு சேவைவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பட்டு, இரும்புத் தாது, ரப்பர் உள்ளிட்டவற்றின் மீதான மறைமுகவரி விதிப்பு வீதங்களிலும் மாற்றங்களை வெளியிட்டார். தரம் குறைந்த இரும்புதாது ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது கோவாவில் இருந்து இரும்புத் தாது ஏற்றமதியை ஊக்கப்படுத்தும்.

பொதுகடன் மேலாண்மை முகமை அமைக்கும் திட்டம் கைவிடப்படும். இதேபோன்று அரசு பத்திரங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கியிடமிருந்து செபி என்னும் இந்திய பங்குகள் பரிமாற்ற வாரியத்துக்கு மாற்றப்படும் முடிவும் கைவிடப்பட்டுள்ளது .

இதனை தொடர்ந்து நிதி மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேறியது. இது பட்ஜெட்டுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி மசோதாவின் மீது மத்திய அரசின் சார்பில் 41 திருத்தங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் தோல்வி கண்டன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...