ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும்

 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்றும் அவர் இந்தவழக்கில் இருந்து தப்பவே முடியாது என்றும் பாஜக.,வின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒரு போதும் தப்பமுடியாது. வழக்கு அந்தளவு வலுவாக உள்ளது.

மாதம் ஒருரூபாய் சம்பளம் வாங்கியவர், இத்தனை சொத்துக்களை எப்படி வாங்கமுடியும்?. எனவே இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா தப்ப வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்படும் . நில கையகப்படுத்தும் சட்டம், சாலை பாதுகாப்புசட்டம், புதிய இன்சூரன்ஸ் மசோதா போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தாலும், தனிமெஜாரிட்டி பெற்றிருப்பதால் அந்தசட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணா நிதியின் குடும்பம், மாறன், சிதம்பரம் என எல்லோரும் சிறைக்குசெல்வது உறுதி. வழக்கு விசாரணை சற்று தாமதமாகலாமே தவிர வழக்கில் இருந்து யாரும் தப்பமுடியாது. அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்று தான். நாட்டுக்கு துரோகம்செய்வது, ஊழல் செய்வதுதான் அவர்களின் கொள்கை. அருண்ஷோரி இப்போது பாரதிய ஜனதாவில் இல்லை. யாரைப் பற்றியும் கருத்துக் கூற அவருக்கு உரிமை இருக்கிறது. அது அவரதுகருத்து.

யாருக்கு தாலிபோட இஷ்டம் இல்லையோ அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டாம். அதற்காக விழா நடத்துவது என்பது தேசதுரோக வேலை. இதுமாதிரி செய்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...