டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

 பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது?. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்?.

பதில்:- தமிழகத்தில் இதுவரை 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.

கேள்வி:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று, வரும் 26-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை தமிழக பா.ஜ.க. எந்த வகையில் கொண்டாட உள்ளது?.

பதில்:- தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளோம். 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கூட்டம் சென்னையிலோ, அதன் சுற்றுவட்டார பகுதியிலோ வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய மந்திரி ஒருவர் பங்கேற்று பேசுகிறார். தமிழகத்தில் தென் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

முன்னதாக, வரும் 26-ந் தேதி சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மறுநாள் (27-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்த பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. மேலும், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி 60 லட்சம் புத்தகங்கள் அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்க உள்ளோம்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?.

பதில்:- இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் பதில் அளிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு கர்நாடக அரசுக்குக்கு (காங்கிரஸ் அரசு) உள்ளது. எனவே, அவரிடம் இருந்து இதற்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களை மத்திய மந்திரிகள் சந்திக்கும் நிகழ்ச்சி 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே?. மீண்டும் எப்போது நடக்கும்?.

பதில்:- தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ஜ.க. ஆட்சியின் ஒரு ஆண்டு கொண்டாட்டம், பாராளுமன்றம் கூடுதலாக 3 நாட்கள் நடந்தது போன்ற சூழ்நிலைகளால் தான், தமிழகத்திற்கு மத்திய மந்திரிகள் வரவில்லை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்கள் பிரச்சினை கவனிக்கப்படும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தும்.

கேள்வி:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. எந்த வகையில் எதிர்கொள்ளும்?.

பதில்:- இப்போது கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை சேர்ப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகிறோம். சட்டமன்ற தொகுதி வாரியாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...