மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன

நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த  ஜனவரி 2021 வாக்கில், மத்திய அரசின் நிதி உதவியுடன் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை கண்டறிந்து பதிவு செய்யும் முகாம் நடை பெற்றது. இதை பாஜக சமூக ஊடக மாநில பொறுப்பாளரும், சக்சம் அமைப்பின் மாநில ஆலோசகருமான தமிழ்தாமரை வெங்கடேஷ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் இனைந்து  20 க்கும் அதிகமான ஒன்றியங்களில் ஏற்பாடுகளை கவனித்தார்.

இதனை தொடர்ந்து பதிவு செய்தவர்களுக்கு நேற்று தஞ்சாவூரில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைசார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் நாராயணசாமி, மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில், 1,705 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பிலான, 3,770 உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமி பேசியது:நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்குவந்த பிறகு நாடுமுழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10,933 முகாம்கள் நடத்தப்பட்டு, ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 20.74 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 410 முகாம்கள் நடத்தப்பட்டு, ரூ.42.84 கோடியில் 92 ஆயிரம்பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை தமிழகத்தில் இதுவரை 3.93 லட்சம் பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 8,576 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.23.60 கோடிக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீனதயாள் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 7,266 பேர் பயன்பெறுகின்றனர். இதற்காக மத்திய அரசு ரூ.12.90 கோடி வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு மூலம் பல்வேறு திறன்மேம்பாட்டு பயற்சிகள் அளிக்கப்படுகிறது. பயற்சி பெறும் அனைவரும், பெரிய தடைகளை தாண்டி, விடாமுயற்சியால் சூப்பர் ஹீரோவாகிறார்கள். அவர்கள் பாரா ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதேபோல, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயலாற்ற வேண்டும். அவர்களுக்காக உதவி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான வழிவகை செய்யும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...