150 தொகுதிகளில் தாமரையை மலரவைப்பது தான், அடுத்த இலக்கு

-”தமிழகத்தில், 2026ல் நடக்கும் சட்ட சபை தேர்தலில், 150 தொகுதிகளில் தாமரையை மலரவைப்பது தான், அடுத்த இலக்கு,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழகத்தில் இருந்து தேர்வாகி பணியாற்றிவரும், மத்திய அரசு வாரிய இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரை யாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், வாரியதலைவர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள், இயக்குனர்கள், அரசு வழக்கறிஞர்கள் என, 333 பேர் பங்கேற்றனர்.

அதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:தமிழகத்தில் தாமரைமலராது என, விமர்சிக்கப்பட்ட நிலையில், முருகன் முயற்சியால், நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்தது. வரும் 2026 சட்ட சபை தேர்தலில் 150 தொகுதிகளில் தாமரை மலரவேண்டும் என்பதுதான், பா.ஜ., வின் அடுத்த இலக்கு.மத்திய அரசின் வாரியபதவிகளை சுமையாக கருதக்கூடாது; இனிய அனுபவமாக கருதி பணியாற்ற வேண்டும். துறை சார்ந்த புத்தகங்களை படித்து, துறை வளர்ச்சிக்கு உத்வேகத்துடன் செயல்படவேண்டும்.

வாரிய பதவிகள் வாயிலாக, பொதுமக்கள் பயன் அடையவேண்டும். கட்சியினர் உற்சாகம் பெற வேண்டும். கட்சிவளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தொண்டர்களுக்கு வழிகாட்டவேண்டும்.பிரதமர் மோடியை போல, நாம் நுண்ணறிவுடன் பணியாற்றி, கட்சிக்கு பெருமைசேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...