அரசியல் கட்சிகளின் சூழ்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்

 அரசியல் கட்சிகளின் சூழ்சிகளுக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் பலியாகி விட வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்ட அறிக்கையில், ''ஐஐடி பெயரை பயன் படுத்தி தங்கள் சொந்த கருத்துகளை வெளியிட்டதாலும், நாட்டின் தலை வர்களை இழிவு படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் சென்னை ஐஐடியில் செயல்பட்டு வந்த மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதை சென்னை ஐஐடி இயக்குநர் சிவகுமார் சீனிவாசன் தெளிவுபடுத்தியுள்ளார். தன்னாட்சி நிறுவனமான சென்னை ஐஐடி, சூழ் நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால், இதற்கு மத்திய அரசு காரணம் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கல்விவளாகத்தை அரசியல் வளாகமாகமாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு ஐஐடி மாணவர்கள் பலியாகிவிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் நடத்தவேண்டாம் என அரசியல் கட்சிகள், இயக்கங்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

மாணவர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எந்த தடையும் இல்லை என ஐஐடி நிர்வாகம் தெளிவு படுத்தியுள்ளது. அங்கு பல அமைப்புகள் தொடர்ந்து செயல் படுகின்றன. கருத்து பரிமாற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், இந்த சூழ்நிலையை பயன் படுத்தி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி போன்றோர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்து கருத்துரிமையின் கழுத்தைநெரித்தவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கல்விநிலையங்களில் அரசியல் தூண்டுதல், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...