நாடுமுழுவதும் பி.எஸ்.என்.எல்.,லுக்கு இலவச ரோமிங்

 வரும் 15ம் தேதி நாடுமுழுவதும் பி.எஸ்.என்.எல்.,லுக்கு இலவச ரோமிங் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கினார். அப்போது கூறுகையில், ''பிஎஸ்என்எல் நிறுவன மொபைல் இணைப்பு வைத்திருப் பவர்களுக்கு நாடுமுழுவதும் வரும் 15ம் தேதி முதல் இலவசரோமிங் சலுகை அளிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் விரும்பிய எந்த நிறுவனத்துக்கும் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்வதற்கான தேசிய எம்என்பி (மொபைல் நம்பர் போர்டபிளிடி) அடுத்த மாதத்தில் அமலாகிறது.

கடந்த நிதியாண்டில் பிஎஸ்என்எல் வருவாய் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. நான் பொறுப்பேற்கும் போது பிஎஸ்என்எல் ₹7,500 கோடி இழப்பை சந்தித்திருந்தது. இதுபோல் எம்.டி.என்.எல்.,லும் இழப்பில் தான் இருந்தது. இவற்றை லாபகரமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் முக்கிய சுற்றுலாதலங்களில் பிஎஸ்என்எல் மூலம் இலவச வை-பை வசதி அளிக்கப்பட உள்ளது'' என்றார்.

பிஎஸ்என்எல் முதன்மை நிர்வாக இயக்குனர் அனுபம் வத்சவா கூறுகையில், '' இலவச ரோமிங் கால் வருவாய் குறையும் எனினும், பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதை தடுத்து, புதிய வாடிக்கை யாளர்களை ஈர்க்க உதவும்'' .

இந்த இலவசரோமிங் ஓராண்டுக்கு இருக்கும். மார்ச் இறுதி நிலவரப்படி 7.72 கோடி பிஎஸ்என்எல் மொபைல் சந்தாதாரர்கள் உள்ளனர். தற்போது மாநில அளவில் ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் மட்டும் ஒருநிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவன சேவைக்கு மொபைல் சந்தாதாரர்கள் மாறிக்கொள்ளும் வசதி உள்ளது. நாடுமுழுவதுமான எம்.என்.பி வசதி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், நாட்டின் எந்தபகுதிக்கு சென்றாலும், மொபைல் எண்ணை மாற்றாமலேயே அங்குள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...