எங்களை பொறுத்த வரை வளர்ச்சி ஒன்றேகுறிக்கோள்

 தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:–

பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை கும்பகோணத்தில் நடக்கிறது. இந்தகூட்டத்தில் வருகிற சட்ட சபை தேர்தலை சந்திப்பது, கட்சியில் சேர்ந்துள்ள 40 லட்சம் உறுப்பினர்களையும் தனித் தனியாக சந்திக்கும் மகாமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தேசிய கட்சியான பா.ஜனதா 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தது சாதாரண விஷயம் அல்ல. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாமாக விருப்பப்பட்டு எஸ்எம்எஸ். அனுப்பி சேர்ந்து இருக்கிறார்கள்.

இன்னும் 4 மாதத்தில் அவர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு பயிற்சி முகாம்கள் நடத்தி கட்சிபணியில் ஈடுபடுத்தும் பணிகள் நடத்தி முடிக்கப்படும். மத்திய அரசின் ஓராண்டுசாதனை விளக்க பொதுக் கூட்டம் 100 இடங்களில் நடத்தப்படுகிறது.

பா.ஜ.க.,வை பொறுத்தவரை சட்ட சபை தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளது. எங்கள்கட்சி பலவீனமான கட்சி என்பதை ஏற்கமுடியாது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டோம். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பல்வேறு கெடுபிடிக்கு இடையேயும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றோம்.

மாவட்ட வாரியாக பொதுக் கூட்டம் நடத்தி வருகிறோம். அதில் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் செயல் பாட்டால் பலம்பொருந்திய கட்சியாகவே இருக்கிறோம்.

இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் பா.ஜ.க.,வை பார்க்கிறார்கள். ஆட்சிமாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்ப தொடங்கிவிட்டார்கள்.

இருதிராவிட கட்சிகளும் மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற வில்லை. கால்வாய்கள் தூர்வாரி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. வேலைவாய்ப்பு இல்லை. திட்டங்கள் அனைத்தும் விளம்பரத்துக்காக அறிவிக்கப் படுகிறதே தவிர நிறைவேற்றுவதற்கு அல்ல. எங்களை பொறுத்த வரை வளர்ச்சி ஒன்றேகுறிக்கோள். அதை முன்னிலைப் படுத்தியே எங்கள் செயல்பாடு அமையும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...