டிஜிட்டல் இந்தியா

 தே.ஜ., கூட்டணி அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, அடுத்தமாதம், 1ம் தேதியில், பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ள இந்ததிட்டத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடபட்டுள்ளது.

* நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும், 'பிராட் பேண்ட்' இணையவசதியை ஏற்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று.

* முதல்கட்டமாக, 2016க்குள், 2.5 லட்சம் கிராமங்களில் இந்தவசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

* அரசின் அனைத்து சேவைகளையும் இணையம் மூலமாகவே மக்களுக்கு அளிப்பது இந்ததிட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம்.

* நாடுமுழுவதும் உள்ள, 2.5 லட்சம் பள்ளிகளில், 'வை – பை' எனப்படும், கம்பியில்லா இணையதொடர்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

* அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100 கோடி மக்களை, இணையம் மூலமாக இணைக்க
திட்டமிடப்பட்டுள்ளது.

* முக்கியமான சுற்றுலா தலங்கள் மற்றும் நான்கு லட்சம் பொதுஇடங்களில், இணைய மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* பிராட்பேண்ட் வசதியை பயன் படுத்த, வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு, மாதத்துக்கு, 150 ரூபாயும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் வசிப்போருக்கு, 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், வசதி படைத்தவர்களைவிட, ஏழைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். நம் நாட்டில் தற்போது தகவல் தொழில்நுட்ப துறையால், 30 லட்சம்பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டால், ஐந்து கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.