திரிபுரா, அசாம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், இருதேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்துள்ளார்.
திரிபுராவில் இருந்து கோமதி மாவட்டம், உதய் பூரை இணைக்கும் சாலையை, இருவழி பாதையாக மாற்றும் திட்டத்துக்கான, அடிக்கல் நாட்டும்விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட, நிதின் கட்காரி கூறியதாவது:திரிபுரா மாநில அரசு, சப்ரூம் நகரிலிருந்து, அசாமில் குகிடால்பகுதியை இணைக்கும் வகையிலும், கோவாய் பகுதியை, தலை நகர் திரிபுராவுடன் இணைக்கும் வகையிலும், புதிதாக இருதேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டுமென, நீண்டகாலமாக கோரி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், இவ்விரு நெடுஞ் சாலைகளையும் நிர்மாணிக்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இப்பணிகள், 801 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறினார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.