மெட்ரோ பணிகளை சூப்பர் பாஸ்ட் ஆக விரைவுபடுத்தியவர் பிரதமர்

 தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மெட்ரோ ரெயிலில் பயணம்செய்தார். நேற்று காலை 10.30 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் கோயம்பேடு ரெயில் நிலையத்துக்கு வந்தவர் பயணிகளுடன் வரிசையில் நின்று ஆலந்தூர் செல்ல டிக்கெட் வாங்கினார்.

பின்னர் ஆலந்தூருக்கு ரெயிலில்சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– மெட்ரோ ரெயிலில் ஏறியதும் இந்நாடு எவ்வளவு முன்னேறி வருகிறது என்ற உணர்வோடு பயணம் செய்தேன். பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோரெயில் சேவை வந்துவிட்டது.

தமிழகத்தில் தாமதமாக வந்திருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த மெட்ரோ ரெயில் பணிகளை சூப்பர் பாஸ்ட் ஆக விரைவுபடுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. மாநில அரசின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது.

மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.40 என்பது அதிகம்தான். கட்டண நிர்ணய குழுவினர் சில செலவுகளையும், இழப்பீடுகளையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டால் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே கட்டண குறைப்புக்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்.

அதிக அளவில் பொதுமக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த வேண்டும்.

மெட்ரோ ரெயிலை கொண்டு வந்தது யார் என்று உரிமை கோரி சண்டை போடுவதைவிட இதில் பயனடையப் போவது மக்கள் என்ற உணர்வு வேண்டும்.

மெட்ரோ ரெயில் சேவையை திருவொற்றியூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். நெற்குன்றம், அரும்பாக்கம் பகுதிகளை சேர்ந்தவர்கள் ரெயில் நிலையத்துக்கு வருவதற்கு வழித்தடங்கள் சரியில்லை என்றார்கள். அதை உடனே செய்து கொடுக்க வேண்டும்.

மெட்ரோ ரெயில் பணி விரைவாக நடந்திருந்தால் ரூ.6 ஆயிரம் கோடி மிச்சப்பட்டிருக்கும். பிரதமர் மோடியை பொறுத்தவரை மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து தேவையான திட்டங்களை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் முடிப்பது தான் அவரது வழக்கம்.

தமிழக சட்டமன்றத்துக்குள் நடப்பது என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அதற்காக நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் நேரடி ஒளிபரப்புக்கு தேவையான நிதி இல்லை என்று தமிழக அரசு கூறியிருப்பது ஏற்படையதல்ல. இதைவிட கூடுதல் நிதி காணொலி காட்சிக்கு செலவிடப்படுகின்றன.

மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி அரசு தொலைக்காட்சியிலாவது நேரடி ஒளிரப்புக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அப்படியானால் தான் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றுள்ளார். 2015–ம் ஆண்டில் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது மக்களுக்கு அரசாங்கம் சிறப்பாக நடக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பஸ் நிலையங்களில் தனி அறை அமைக்கப்படுவதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இவ்வளவு டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது இந்த திட்டங்களால் என்ன பயன்?

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம். மெட்ரோ ரெயிலை பற்றி 2 திராவிட கட்சிகளும் சண்டை போட்டுக்கொள்கின்றன. இதில் 2 கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன. பல ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளில் மெட்ரோ ரெயில் இருந்தும் அதை இங்கு கொண்டு வர தாமதம் ஏன் ஏன்று சிந்தித்தார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...