சமூக ஊடகங்களை பிரசார ஆயுதங்களாக பயன் படுத்துவோம்

 தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெறும் சட்ட பேரவைத் தேர்தலில் சமூக ஊடகங்களை பிரசார ஆயுதங்களாக பயன் படுத்துவோம் . வரும் 2016-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் சமூக ஊடகங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் 500 பேர்வரை கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது. அரசை மாற்றும் சக்தி சமூக ஊடகங்களுக்கு இருப்பதால், இளைஞர்களின் மூலம் சமூக வலை தளங்கள் உள்ளிட்டவைகளில் பிரசாரம் செய்ய உள்ளோம்.

இதேபோன்று அனைத்து வாய்ப்புகளையும் பயன் படுத்தி சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வோம்.
தமிழகத்தை பொருத்த வரையில் பாஜகவில் 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது, மிகப்பெரிய அளவில் பாஜக வளர்ந்து வருவதை காட்டுவதாக உள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு வியூகங்களை கையாள உள்ளோம். அதில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களை சந்திப்பதும், அதிமுக அரசுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களின் செயல்படாக அமையும்.

இந்த வகையில் ஊழல், குறைந்து வரும் வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் மூடப்படும் சூழல் போன்ற அரசின் தவறான செயல்களை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகத்தில் புதிய கூட்டணி அமைக்க தேவையில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போதும் செயல் பாட்டில் உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் பலகட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றார் .

பாஜக தொண்டர்களுக்கான சமூக ஊடகப் பயிலரங்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...