வேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குவதாக மத்திய சட்டமந்திரி சதானந்த கவுடா குற்றம் சாட்டி உள்ளார்.
சதனாந்த கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:-
லலித்மோடி விவகாரத்தில் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ் சில உதவிகளை செய்துள்ளார். அது பெரியகுற்றம் அல்ல. ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயும் எந்தகுற்றமும் செய்யவில்லை.
இதேபோல் வியாபம் பிரச்சினையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் தான் தானாக முன்வந்து சி.பி.ஐ. விசாரணைக்கு தயார் என அவரே அறிவித்தார். இவர்கள் தவறு செய்ய வில்லை என்பதை பாஜ தெளிவுபடுத்தி இருக்கிறது.
ஆனால் பா.,ஜனதா அரசு மீது குற்றம்சொல்வதற்கு வேறு எதுவும் கிடைக்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இந்த பிரச்சினைகளை பெரிதாக்குகின்றன. காங்கிரஸ்க்கு வேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை முடக்குகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.என்று சதானந்த கவுடா கூறினார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.