காஷ்மீர் விவகாரத்தை ரஷ்யாவின் உபாநகரில் ஏன் எழுப்பவில்லை

 தேசியபாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையை பாகிஸ்தான் ரத்துசெய்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தை ரஷ்யாவின் உபாநகரில் ஏன் எழுப்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது என ரஷ்யாவின் உபா நகரில் இருநாடுகளின் பிரதமர்கள் சந்தித்த போது முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் டில்லியில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேசுவது என முடிவானது. ஆனால், இந்த சந்திப்பிற்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்திக்க பாகிஸ்தான் முடிவுசெய்தது. மேலும் பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர்குறித்து கிளப்பவும் முடிவு செய்தது. இதற்கு இந்தியா எதிர்ப்புதெரிவித்தது. அவர்களை சந்திக்கக்கூடாது என இந்தியா கண்டிப்புடன் கூறியது. பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தால், பேச்சு வார்த்தை நடக்காது என இந்தியா கூறியது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இந்நிலையில் பத்திரிகை யாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பேச்சு வார்த்தையின் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவது என பாகிஸ்தான் முடிவுசெய்திருந்தால், ரஷ்யாவின் உபா நகரில் இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்த போது ஏன் பேசவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் மூன்றாவது நாடு தலையீட்டை ஏற்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்யபட்டது. அவர்கள் பேச்சு வார்த்தை தொடர்பான திட்டத்தை முன்னரே முடிவுசெய்திருக்க வேண்டும். இனி என்ன செய்யவேண்டும் என்பதை பாகிஸ்தான் தான் முடிவு செய்யவேண்டும். பாகிஸ்தானுடன் சுமூகமான உறவை தொடர இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானை பொறுத்த வரையில் அவர்கள் தான் முடிவுசெய்ய வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...