300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், 300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது . ஸ்மார்ட் சிட்டியை போன்று கிராமங்களில் அனைத்து வசதிகளும் இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. சியாமபிரசாத் முகர்ஜி என்ற பெயரிலான திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களை மேம்படுத்த கடந்த பட்ஜெட்டில் ரூ.5,142 கோடியை மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை செயல் படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்தது. நாடுமுழுவதும் 300 கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இப்பணிகளை 2020ம் ஆண்டுக்குள் முடிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யபட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கிராம பஞ்சாயத் துக்கள் மூலம் கிராமங்கள் கண்டறியபட்டு, அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. 25 ஆயிரம்முதல் 50 ஆயிரம்வரை மக்கள் தொகை அடங்கிய கிராமங்களை உள்ளிடக்கி இந்தபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலைப் பாங்கான இடங்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களில் சாலை வசதிகள், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, வீடுகளுக்கு குடிநீர், காஸ் இணைப்பு, நடமாடும் மருத்துவ வசதி, டிஜிட்டல் முறையிலான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

நகர்புற வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை போன்று கிராமப்புறங்கள் மேம்பாட்டுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராம மக்கள் பொருளாதாரத்தில் மேம்படும் வகையில், தொழிற் நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...