300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், 300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது . ஸ்மார்ட் சிட்டியை போன்று கிராமங்களில் அனைத்து வசதிகளும் இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. சியாமபிரசாத் முகர்ஜி என்ற பெயரிலான திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களை மேம்படுத்த கடந்த பட்ஜெட்டில் ரூ.5,142 கோடியை மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை செயல் படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்தது. நாடுமுழுவதும் 300 கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இப்பணிகளை 2020ம் ஆண்டுக்குள் முடிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யபட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கிராம பஞ்சாயத் துக்கள் மூலம் கிராமங்கள் கண்டறியபட்டு, அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. 25 ஆயிரம்முதல் 50 ஆயிரம்வரை மக்கள் தொகை அடங்கிய கிராமங்களை உள்ளிடக்கி இந்தபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலைப் பாங்கான இடங்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களில் சாலை வசதிகள், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, வீடுகளுக்கு குடிநீர், காஸ் இணைப்பு, நடமாடும் மருத்துவ வசதி, டிஜிட்டல் முறையிலான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

நகர்புற வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை போன்று கிராமப்புறங்கள் மேம்பாட்டுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராம மக்கள் பொருளாதாரத்தில் மேம்படும் வகையில், தொழிற் நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...