ஒருலட்சம் தொண்டர்களுக்கு தேர்தல் பயிற்சி

 தமிழகத்தில் பா.ஜனதா கட்சியின் ஒருலட்சம் தொண்டர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கவுள்ளதாக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார்.

தமிழக பா.ஜனதா கட்சியின் தேர்தல் மேலாண்மைகுழு கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் பொன் ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர்கள் முரளிதர ராவ், எச்.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டமுடிவில், பா.ஜனதா தேசிய செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளரான முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 234 சட்ட சபை தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, தொகுதிக்கு ஒருகுழு அமைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம்பேருக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எங்களது பிரசாரகுழுவினர் மக்களை நேரடியாக சந்தித்து மாநில, மண்டல, மாவட்ட அளவிலான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

பிரதம மந்திரியின் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன்வழங்கப்பட உள்ளது. சிறு வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை 'சிசு' திட்டத்தின் மூலமும், 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை 'கிஷோர்' திட்டத்தின் மூலமும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் 'தருண்' திட்டத்தின் மூலமும் கடன் வழங்கப் படுகிறது. முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மக்களிடம் இதனை பிரபலப் படுத்த உள்ளோம்.

தமிழகத்தை பொறுத்த வரையில், தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியே நீடிக்கிறது. பாமக. முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவிக்கவில்லை. தேர்தல் வரும் போது, இந்த நிலைப்பாடு மாறக்கூடும்.

விரைவில் எங்கள் கூட்டணியில் வேறு சிலகட்சிகளும் இணைய உள்ளன. தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக., தி.மு.க.வுக்கு மாற்று அணியாக அமையும்.

காவிரி நதி நீர் பிரச்சினை நாட்டின் ஒற்றுமை சார்ந்தவிஷயம். இதனை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு இருமாநில முதல்-அமைச்சர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார்.

இலங்கை பிரச்சினையில் தமிழர் நலனுக்காக ராஜ தந்திரத்துடனும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்தும் கடந்த 1½ ஆண்டு காலமாக மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லாமலும், இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ் வாதாரத்தையும் கருத்தில் கொண்டு நல்ல முறையில் முடிவு எடுப்போம்.

பீகார் தேர்தல் முடிவடைந்ததும், தமிழக தேர்தலையொட்டி பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தமிழகம் வர உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...