மகாத்மா காந்தியின் 146-வது பிறந்த நாளை யொட்டி டெல்லி ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மாவின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திலும் பிரணாப் பங்கேற்றர். மகாத்மா காந்தியின் நினை விடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், உள்பட பல்வேறு தரப்பினரும் மகாத்மா காந்தி நினை விடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 111-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.