லாரி ஸ்டிரைக் வாபஸ்

 மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 1-ம் தேதி முதல் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 4 நாட்களாக லாரிகள் இயக்கப்படாததால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறி விலை அதிகரிக்கத் தொடங்கியது. ஏராளமான சரக்குகள் முடங்கியதால், அரசுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இன்று 5-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் கொடுத்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறச்செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய கட்காரி, போக்குவரத்து துறை செயலாளர் விஜய் சிப்பர் தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப் பட்டிருப்பதாகவும், அதில் லாரி உரிமையாளர்கள் சங்க பிரநிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்தக் கமிட்டி, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து டிசம்பர் 15ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனை லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதையடுத்து, ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா அறிவித்துள்ளார். இதன்மூலம் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...