எல்லா துறைகளிலும் ஊழல்

 தமிழக பாஜக. தலைமை அலுவலகமான கமலாலயத்தில, லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 113-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கலந்து கொண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகின்ற 2016 தேர்தல் மூலம், தமிழக மக்களுக்கு ஊழலற்ற, அடக்குமுறை அற்ற, அனைத்து அடிப்படை வசதிகள் கூடிய ஆட்சியை அமைக்க பா.ஜ.க. முழுமூச்சாக பாடுபடும் என்பதை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளில் மக்களுக்கு விடுக்கும் செய்தியாக தெரிவிக்கிறேன்.

ஏனென்றால், தமிழகம் இன்று அத்தகைய கட்டாய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை.

மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதில் மத்திய அரசு மும்முரமாக இருந்து வருகிறது. அதில் ஒரு பகுதிதான், ‘இந்திர தனுஷ்’ தடுப்பூசி திட்டம்.

ஆனால், இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் போது, அதில் பெரும்பாலும் முதல்வரின் படம் இடம் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் திட்டம் என எடுத்துரைக்கப்படுவதில்லை.

டாஸ்மாக் கடைகளை அகற்றி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்டோபர் 2-ந் தேதியிலாவது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், காந்தியும் வந்து சென்று விட்டார், ஆனால் டாஸ்மாக் ஆறாக தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படி, தமிழகத்திற்கு 2½ லட்சம் கோடி ரூபாய் வருவாய் வருமேயானால், 26 ஆயிரம் கோடி ரூபாய் உங்களுக்கு தேவையில்லையே, 2½ லட்சத்திற்குள் மக்கள் நல திட்டங்களை செய்தால் போதுமே.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...