இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டது உண்மையே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்தபுகார்கள் உண்மையான வைதான் என்று அரசு விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு அளவில் விசாரணை நடத்தும் போது அதில் வெளிநாட்டு நீதிபதிகளையும் சேர்க்க வேண்டும் என்ற ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் 2009-ம் ஆண்டில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இதில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

உள்நாட்டு போர் நிறைவடைந்தப் பிறகு காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரிக்க முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ச பதவிக் காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி மாக்ஸ்வெல் பரணகம தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது.முதலில் காணாமல் போனவர்கள் குறித்து மட்டும் விசாரித்த இக்குழுவின் விசாரணை வரம்பு, போர்க் குற்ற புகார்களை விசாரிப்பதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் 178 பக்க விசாரணை அறிக்கையை குழுவின் தலைவர் நீதிபதி மாக்ஸ் வெல் பரணகம அண்மையில் அதிபர் சிறிசேனவிடம் வழங்கினார். இந்த அறிக்கை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

[su_quote]இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவம் கொடுங்குற்றங்களை புரிந்தது என்று சுமத்தபட்ட புகார்கள் நிரூபணமாகி உள்ளன. இவற்றை இன்னும் திட்டவட்டமாக நிரூபித்தால் ராணுவத்தில் இடம் பெற்ற சில வீரர்கள் கொடும் குற்றங்களை புரிந்ததும் அது போர்க் குற்றம் என அறுதியிட்டு சொல்லவும் முடியும்.[/su_quote]

போர்க் குற்றப்புகார்கள் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடலாம். இலங்கை சட்ட அமைப்புக்கு உட்பட்டு போர்க்குற்றங்கள் பிரிவு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவேண்டும்.

இறுதிகட்ட போரின் போது நடந்த கொடுமைகளை காட்சிப்படுத்தி ‘நோபயர் ஸோன்’ என்ற தலைப்பில் பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட வீடியோ போலியல்ல, உண்மையானது தான்.

தமிழ் சிறைக்கைதிகளை இலங்கை ராணுவவீரர்கள் கொடூரமாக கொலைசெய்யும் இந்த வீடியோ பதிவுகள் நிஜமானவை தான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த வீடியோகாட்சிகள் பற்றி நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவது தான் நியாயமாகும்.

நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் வந்தபோது படுகொலை செய்யப்பட்டசம்பவம் தொடர்பாகவும் நீதிபதி ஒருவர் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

இறுதிகட்டப் போரின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர் என்ற புகார்களை அடியோடு நிராகரித்து விட முடியாது. சட்டநியதி மீறி நடந்துள்ள கொலைகள் மற்றும் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டது பற்றி நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும்.
போர்க் குற்றம் பற்றிய விசாரணை நம்பகத்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும் என்றால் சர்வதேச நீதிபதிகள் இந்த விசாரணையில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...