மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின்கட்காரி, நவம்பர், 20ல் புதுச்சேரி வருகிறார். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்தியமோட்டார் காங்கிரஸ் சார்பில், லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தது.
இதற்கு தீர்வுகாண, மத்திய அரசு சார்பில், குழு அமைக்கப்பட்டது; போராட்டம் வாபஸ் ஆனது.
இந்நிலையில், நவ., 20ல், அகில இந்தியமோட்டார் காங்கிரசின், 200வது பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியில் நடக்கிறது. அதோடு, தென் மாநில லாரி உரிமையாளர் சங்க பொதுக் குழுவும் கூடுகிறது.நவ., 22 வரை, இந்நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதில், சிறப்பு அழைப்பாளராக, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பங்கேற்கிறார்.
நாடுமுழுவதிலும் இருந்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள், 1,000 பேர் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்தில், சரக்கு வாகனங்கள் மற்றும் சுங்கச் சாவடி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகிடைக்கும் விதமாக, முக்கிய அறிவிப்புகளை, கட்காரி வெளியிடுவார் என, லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.