மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மூன்றுபேர் கொண்ட பாஜக குழு

 தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றுபேர் கொண்ட பாஜக குழுவினர் பார்வையிட உள்ளதாக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

 சென்னை, திருவொற்றியூர், கார்கில்நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியா ளர்களிடம் அவர் கூறியது:

 கார்கில் நகரில் பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றபடாததால் மழை நீர் சூழ்ந்து மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். பொதுஇடங்களை ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி யிருப்பது போதுமானதாக இல்லை. பாதிப்புகளை நேரடியாக ஆய்வுசெய்து, இழப்பீடுகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணம்தொடர்பாக, மத்திய அரசிடம் உதவி கோரினால் கட்டாயமாக செய்து கொடுக்கத்தயாராக உள்ளது.

 தமிழகத்தில் மழையால் பாதிக்கபட்ட இடங்களை ஆய்வுசெய்ய மூன்றுபேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பொன். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கோபால சின்னையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வெள்ளம்பாதித்த பகுதிகளை வரும் சனிக் கிழமை (நவ. 21) ஆய்வு செய்ய உள்ளனர் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...